Sunday, August 30, 2009

கணிணி பயன்படுத்துவோருக்கு ஓர் எச்சரிக்கை!!

யார்யார் அதிகமான நேரம் கணிணிகளை பயன்படுத்துகிறார்களோ, அவர்கள் கவணிக்கவேண்டிய முக்கியமான தகவல் இது!

கீபோர்ட்டையும் மவுசையும் சரியான உயரம் மற்றும் திசையில் பயண்படுத்த தவறினால் "கார்பல் டனல் சின்ட்ரோம்" (Carpal Tunnel Syndrome)எனும் அறுவை சிகிச்சைக்கு உள்ளாக நேரிடும் அபாயம் உள்ளது.

கீழே தொகுக்கப்பட்டுள்ள படங்கள் கார்பல் டனல் சின்ட்ரோம் துன்பத்துக்கு ஆளான ஒருவரின் கை அறுவைச் சிகிச்சை புகைப்படங்கள்!






கார்பல் டனல் சின்ட்ரோம் வராமல் தடுக்க, கீபோர்ட் மற்றும் மவுஸ்சை பயன்படுத்தக்கூடிய சரியான வழிமுறைகள்..






கார்பல் டனல் சின்ட்ரோம் வராமல் தடுக்க, கைகளுக்கான பயிற்சி முறை படங்கள்!!

இதை மற்ற நண்பர்களுக்கும் அனுப்பி எச்சரிக்கை செய்யுங்கள்... நன்றி!

Monday, August 24, 2009

சில கேள்விகளும்.. கோலிவுட்டின் பதில்களும்!!



கேள்வி:
அன்புள்ள கோலி,
நான் பட்டணத்தில் வசிக்கும் அழகான ஹீரோவிக்கு அம்மா. அவனை திரும்ப கிராமத்துக்கு வரவழைச்சு, கிராமத்து பெண்ணை காதலிக்க வைக்கனும். அவன் இங்க வரமாட்ரான்.. அவனை கிராமத்துக்கு வரவழைக்க என்ன செய்யனும்?


பதில்:
ரொம்ப சிம்பிள்.. ஒரு தந்தி அடிக்கனும் "அம்மா சீரியஸ்! உடனே வா!!". தந்திய பார்த்து வந்தவுடனே, "டேய், என் பேர குழந்தைங்கள பாக்காம என் உயிர் போகாதுடா" ன்னு ஒரு பிட்ட போடு. பாக்கி விஷயத்த நம்ம ஹீரோயின் பார்த்துப்பா.. அப்புறம் என்ன? ஒரு காப்பாத்துற சீனு.. இரண்டு குத்துபாட்டு... சண்டை.. சுபம்!!

கேள்வி:
அன்புள்ள கோலி,
நான் ஒரு ஹீரோ, என்னை யாரும் கண்டுபிடிக்க முடியாதபடி மாறுவேஷம் போடனும். ஏதாவது ஐடியா குடுங்க..


பதில்:
உங்களை கண்டுபிடிக்க முடியாதபடி மாத்த பல வழிகள் இருந்தாலும்.. நான் உங்களுக்கு ரெக்கமண்ட் பண்றது என்னன்னா.. "கருப்பு கூலிங்கிளாஸ் போட்டுட்டு, தலையை சீவாமல் கலைச்சி விட்டுட்டீங்கன்னா" உங்க அம்மாவே எதிருல வந்தாலும் கண்டுபிடிக்க முடியாதுவே! இன்னம் கொஞ்சம் கஷ்டமா டிரை பண்ணனுமா? " மீசையை எடுத்துட்டு, கேப் போட்டா போதும்" உங்க டைரக்டர்ராலையே கண்டுபிடிக்க முடியாது!

கேள்வி:
அன்புள்ள கோலி,
வெரி அர்ஜண்ட்! கண்டிப்பாக பதில் வேண்டும். ஹீரோயினை பாம்பு கடித்துவிட்டது, இப்ப நான் ஹீரோவாக என்ன செய்ய வேண்டும்?


பதில்:
பயப்பட வேண்டாம். பாம்புகள் விஷத்தை ஏற்ற மட்டும் செய்யாது, திரும்பவும் விஷத்தை உறியும் சக்தி கொண்டது. நீங்க திரும்ப விஷத்தை எடுக்க வைக்க செய்ய வேண்டியது என்னன்னா.. நல்ல உயரமான மலையில் ஏறி நின்று பாம்பை புகழ்ந்து பக்தி பாடல் ஒன்றை பாடனும்! இப்ப பாம்புக்கு இரண்டுல ஒரு முடிவு எடுக்கனும். ஒன்னு மலையில ஏறி வந்து பாடுற உங்கள போடனும். இல்லனா, விஷத்தை திரும்ப ஊறிஞ்சிட்டு ஓடனும். பாம்பு மலை மேல ஏறி வந்து உங்களை கடிக்க சோம்பேறிதன பட்டு, விஷத்தை திரும்ப எடுத்துடு்ம். எப்புடி ஐடியா?

கேள்வி:
அன்புள்ள கோலி,
ஹீரோயின் பெண்களுக்கான ஹாஸ்டலில் தங்கியிருக்கிறாள். ஹீரோ அவளை காதலிக்கிறதால.. யாருக்கும் தெரியாமல் ஹீரோயினை சந்திக்கறது எப்படி?

பதில்:
ரொம்ப ஈசியான கேள்விதான். கடைக்கு போய் ஒரு பர்தா வாங்கி போட்டுகோங்க.. நேரா ஹாஸ்டலுக்கு போங்க. நீங்க 6 அடிக்கு மேல இருந்தாலோ, கையில.. காலுல நிறைய முடி இருந்தலோ, கவலப்படாதிங்க.. யாரும் உங்களை கவனிக்க மாட்டாங்க! எக்ட்ரா பிட்டிங்ஸ் பத்தி நான் சொல்ல தேவையில்லைன்னு நினைகிறேன்..


கேள்வி:
அன்புள்ள கோலி,
நான்தான் படத்தில் ஹீரோவோட தங்கச்சி. எனக்கு கல்யாணம் நடக்க.. நான் எந்த வகையான ராசிகல் மோதிரம் அணிய வேண்டும்?

பதில்:
ராசிக்கல் எல்லாம் ஒரு மேட்டரே இல்ல.. எப்படியா இருந்தலும் உங்களை ஒருத்தவன் ரேப் பண்ணிடுவான் கவலப்படாதிங்க! ரேப் பண்ணிட்டு கல்யாணம் பண்ண முடியாதுன்னு உங்க அண்ணன்கிட்ட சவால் வேற விடுவான். அப்புறம் என்ன? அண்ணன் பொங்கி, அவனை கும்மி.. எது எப்படியோ.. உங்களுக்கு கடைசியல கல்யாணம் நடக்கும் அவ்வளவுதான்!!

கேள்வி:
அன்புள்ள கோலி,
என்னுடைய கார் ஹய்வே ரோட்டுல ரிப்பேராயிடுச்சு. இப்ப நா அதை எப்படி சரி பண்றது?

பதில்:
இந்த மாதிரி நேரத்துல.. ஒரே ஒரு தீர்வுதான் இருக்கு. அது... ரேடியேட்ர்ல தண்ணி ஊத்துனா சரியாகிடும். இப்ப நீங்க டிக்கியில இருக்குற வாட்டர் கேனை எடுத்துகிட்டு, உங்களுக்கு புடிச்ச திசையில போங்க.. கண்டிப்பா அங்க ஒரு அருவியும், அந்த அருவியில குளிச்சிகிட்டே பாட்டு பாடுற ஒரு அழகான பொண்ணும் இருக்கும்!

கேள்வி:
அன்புள்ள கோலி,
நான் ஹீரோயினா நடிக்கிறேன். குளிக்கும் சீனில் எப்படி நடிப்பது என்று எனக்கு உங்கள் ஆலோசனை தேவை!

பதில்:
இது கொஞ்சம் பிரைவசியான மேட்டர்தான்.. இருந்தாலும் நீ்ங்க கேட்கறீங்கன்னு சொல்றேன். உடம்பை சுத்தி புடவையோ, டவல்லோ கட்டிக்கனும். ஷவர்ல குளிக்கும்போது புடவையோ, டவல்லோ படாத இடங்களுக்கு சோப்பு போடனும் அவ்வளவுதான்!!

கேள்வி:
அன்புள்ள கோலி,
நான் வில்லன் நடிகராக ஆக ஆசபடுறேன். உங்களுடைய அட்வைஸ் வேனும் எனக்கு.. குடுப்பீங்களா?

பதில்:
கண்டிப்பாக! முதல் சீனில் இருந்து.. யாரை பார்த்தாலும் முரைக்கனும், அள்ளக்கைகளை அப்பபப்ப அறையனும், "ஹேய்.. ஏய்.. ஏயயய்ய்ய்ய்ய்"ன்னு சம்பந்தம் இல்லாம சவுண்டு விடனும், குறிப்பா ஹீரோ எத்தனை தடவை அடிச்சாலும்.. வலிக்காத மாதிரியே திரும்ப போய் அவங்கிட்ட அடிவாங்கனும், கடைசியா.. "திருந்தனும்" இல்லன்னா.. "செத்துபோகனும்". அவ்வளவுதான் பாஸ்!!

கேள்வி:
அன்புள்ள கோலி,
நான் ஒரு ஏழை ஹீரோ. ஆனா.. வில்லன்களை நம்ப வச்சி பழிவாங்க, நான் பணக்காரன் போல் ஆக்ட் குடுக்கனும். ஐடியா ப்ளீஸ்?

பதில்:
முதல்ல நீங்க துபாய் வடிவேலு போட்ட ஷைனிங் துணியில சட்டை தச்சி போட்டுகிட்டு, முட்டிய தொடுற மாதிரி கோட் போட்டுகனும். அப்புறம் மூஞ்சை மறைக்கிற மாதிரி கண்ணாடியும், காலுக்கு சம்பந்தமே இல்லாத ஷூவையும் போட்டுகனும். சையிடுல எக்ஸ்ட்ரா பிட்டிங்ஸ் மாதிரி.. மண்டைக்கு லைட் கலர், கையில 9 விரலுக்கு கிளிட்டரிங் மோதிரம், எருமை மாட்டு சங்கிலி போல ஒன்னு கழுத்துல போட்டுக்கனும். கூடவே.. லெப்ட் சைட் இரண்டு பேரு, ரைட் சைட் இரண்டு பேரு,(கண்டிப்பா அதுல 2 பேரு நீக்ரோவா இருக்கனும்) டிப்-டாப்பா நடந்து வரனும். எல்லாரோட காதுலேயும் செவிட்டு மிஷின் மாதிரி ஓயரை காதுல சொருகியிருக்கனும். வில்லன்கிட்ட பேசுறப்ப.. ஈரோப்காரன் கேட்டா செத்துபோற லெவலுக்கு இங்கிலிபீசு பேசுனா.. நீங்களும் மல்டி மில்லனியர்தான்!!

(எழுதறத்துக்கு இன்னும் நிறையா இருந்தாலும்.. டைப் அடிக்க கை வலிக்குதுன்னு உண்மைய சொல்லாம, உங்க பொன்னான நேரத்தை வீணடிக்க விரும்பலன்னு பொய் சொல்லி முடிச்சிகிறேனுங்கோ!)

Wednesday, August 19, 2009

Phishing-ன்னா என்னன்னு தெரியுமா பாஸ்?

Credit Card வைத்திருக்கும் எல்லோரும் அவசியம் தெரிஞ்சிக்க வேண்டிய ஒரு அடிப்படை விஷயத்தை பத்திதான் சொல்லபோறேன்...

கம்ப்யூட்டர் உலகில், பெரும் இம்சையாக எழுந்துள்ள இந்த க்ரிடிட் கார்ட் குறித்த ரகசியங்கள் திருடும் பக்கா திருட்டு, இப்போ சர்வதேச குற்றப்புலனாய்வு துறையினருக்கே (சக்திவேலை நினைக்க வேண்டாம்!) சவாலாக கிரிமினல் செயற்பாடாக உருவெடுத்திருக்கிறது.


Carding, Phishing, Phreaking என்று பல பெயர்களில் இந்த தகவல் திருட்டு நடக்குதுங்க. ஃபிஷ்சிங்- ன்னா தூண்டில் போட்டு, தூண்டிலைக் கவ்வும் மீன்களைப் பிடிக்குறதுக்கு, Phishing -ங்ன்னா அதேபோல தூது அனுப்பி, அந்தத் தூதை உண்மையென்று நம்பும் இ.வா. க்களை பிடிப்பது.. அம்புட்டுதேன்!!.

இப்ப உங்களுக்குப் புரிஞ்சிருக்குமுன்னு நினைகிறேன். க்ரிடிட் கார்ட் இப்ப எல்லோரும் பொதுவாக ஆன்லைன் இன்டர்நெட்ல பயன்படுத்துறதுனால , அதையே சாக்கா வைச்சிகிட்டு, இந்த திருட்டில் தினமும் பல ஆயிரம் திருட்டு பசங்க.. இத ஒரு பொழப்பாக்கி கை நிறையா சம்பாரிகிறானுங்க!

நாம் கொடுக்கும் இரகசியத் தகவல்களைப் பெறும் வங்கிகள், நிறுவனங்கள், மென்வலை வர்த்தகம், அரசுயந்திரங்கள் நிலையங்களுடன் நாம் பரிமாறும் பலவித தனிப்பட்ட தகவல்களை இவர்கள் திருடுகிறார்களா என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். ஆனால் உண்மை அதுயில்லை. நாம் அவர்களுக்கு வழங்கும் தகவல்கள், தகவல்களாகவே செல்லாமல், அவை திரிக்கப்பட்டு ‘encrypted’ வடிவில் செல்வதால், அந்தத் தகவல்களை அவ்வளவு சுலபமா யாரும் திருடிவிடமுடியாது.

ஆனால், இப்படி ரகசியமாகப் பரிமாறப்படும் தகவல்களை, பரிமாறுபவர்களிடமிருந்து ஏமாற்றிப் பெற்றுக்கொள்ளுவதற்காக மென்வலைத் திருடர்கள் உருவாக்கி வைத்திருக்கும் மாற்றுத் திட்டமே இந்த ‘phishing’ என்ற சதிவலைத் திட்டம்.

உதாரணமாக.. சரவணன் என்பவர் ஆன்-லைன் வசதியைப் வைத்து, இன்டர்நெட் மூலமா அவரோட வங்கியில் தொடர்பை ஏற்படுத்தி கொள்கிறார். முதற்தடவை சரவணன் தனது கணக்கை ஆன்-லைன்ல் ஆரம்பிக்கும்போது தனது பிரத்தியேக தகவல்கள் அனைத்தையும், வங்கிக் கடனட்டை ரகசிய நம்பர், முடியும் காலம் போன்ற அனைத்தையும் ‘ஆன்-லைன்’ பத்திரத்தில் நிரப்புறார். இவை அனைத்தும் தங்களுக்குக் கிடைத்து, எல்லாம் சரியாக இருப்பதாக அந்த வங்கியிலிருந்து, சரவணனின் ஈமெயில் முகவரிக்கு ஒரு பதிலும் வருகிறது. வங்கி அனுப்பிய பதிலைப் பார்த்து, சரவணன் திருப்தியடைகிறார். அன்றிலிருந்து சரவணன் தனது வங்கியுடன் அவ்வப்போது ‘ஆன்-லைன்’ல் பணப்பரிமாற்றம், பணம் செலுத்துவது மற்றும் இதர அனைத்து வங்கி சேவைகளையும் பயன்படுத்துகிறார்.

இந்த விஷயம் வரை எந்தத் தவறும் பாதிப்பும் இதுவரை சரவணனுக்கு ஏற்படலை.
எல்லாம் ஈசியாவும், பாதுகாப்பாகவும் நடைபெறுவதாய் சரவணன் மகிழ்ச்சியுடன் இருக்கிறார். வழக்கம் போல ஒரு நாள் சரவணன் தனது ஈமெயில்களைப் பார்வையிடுகிறார். வங்கியிலிருந்து ஒரு ஈமெயில் வந்திருக்கிறது. எல்லா ஈமெயில்களைப் போன்று இந்த ஈமெயிலையும் திறக்கிறார் சரவணன். வங்கியிலிருந்து வந்துள்ள இந்த ஈமெயிலில் நட்புடன் கூடிய ஒரு அவசர அழைப்பு. அது என்னவென்றால்... "நண்பர் சரவணன் அவர்களே, தங்களது பிரத்தியேக தகவல்களை நாங்கள் திரும்ப உறுதி செய்துகொள்ள விரும்புகிறோம். இன்னும் 5 நாட்களுக்குள் தங்கள் தகவல்களை கீழுள்ள கட்டங்களில் நிறைத்து ஈமெயில் பண்ணவும். 5 நாட்களுக்குள் ஈமெயில் மூலம் பதில் தராவிட்டால், உங்களுடைய ‘ஆன்-லைன்’ வங்கிச்சேவை தற்காலிகமாக நிறுத்தப்படும்" என்று அந்த ஈமெயிலில் எழுதியிருக்கும்.

ஈசியா உக்கார்ந்த இடத்திலேயே ‘ஆன்-லைன்’ வசதியை அனுபவித்துக்கொண்டிக்கும் சரவணனுக்கு, இந்த வசதி நிறுத்தம் பெரும் சிரமமான ஒன்றாக அமைந்துவிடலாம் என்பதால், சரவணன் உடனடியாகவே அந்த ஈமெயில் மூலம் அனைத்து விபரங்களையும் பதில் ஈமெயிலாக அனுப்புகிறார். ஆனால் பாவம் சரவணன்... இங்கேதான் இந்த ‘phishing’ திருட்டர்கள் விரித்த வலையில் விழுந்துவிடுகிறார்.

உண்மையில் நடந்தது என்னன்னா.. வங்கி அனுப்பும் அதே ஈமெயிலைப் காப்பி செய்து, அவர்களது ‘லோகோ’, அவர்களது பெயர், அவர்களது முகவரி உட்பட, அப்படியே அவர்களது கடிதம் போன்று ஈமெயிலில் தயாரித்து, தங்களது இரகசிய ஈமெயில் ஊடாக பல ஆயிரம் பேருக்கு இந்த ஈமெயிலை அனுப்பி விடுகிறார்கள் திருடர்கள். தங்களது ஈமெயில் முகவரியை மறைத்து, வங்கி முகவரி போன்ற ஒரு முகமூடி முகவரியை உருமாற்றி, இந்த ஈமெயில் அனுப்பப்படுவதால்.. பெறுனர் இந்த ஈமெயில் யாரிடமிருந்து வந்தது என்பதைப் பார்க்க மறந்துவிடுகிறார்.

இப்போது சரவணன்அனுப்பிய பதில், திருடர்களிடம் சென்றுவிடுகிறது. சரவணனின் தகவல் கிடைத்து, 3 நிமிடங்களுக்குள், அவரது க்ரிடிட் கார்ட் பதம்பார்க்கப்படுகிறது. கடன் அட்டையில் பெறக்கூடிய ஆகக்கூடிய தொகை, பல ஆயிரம் மைல்களுக்கு அப்பாலுள்ள ஏதோ ஒரு சந்தையில் காசாக்கப்படுகிறது!


மேலே உள்ள படங்கள் பிரபல நிறுவனங்களின் பெயரை வைத்து ஏமாற்றிய Phishing நகல்கள்!

ஆக, இணையத்தில் அல்லது ஈமெயிலில், உங்களது க்ரிடிட் கார்ட் விபரங்கள், தனிப்பட்ட SIN கார்ட் மற்றும் கடவுச்சொற்கள் (Password) போன்றவற்றை எக்காரணம் கொண்டும் குடுக்காதீர்கள். அப்படி வழங்கும்படி கேட்டால்... கேட்ட வங்கியோ, நிறுவனத்தையோ தொலைபேசியில் அழைத்து அல்லது ஒரு சிறிய ஈமெயில் தகவல் அனுப்பி, அவர்கள் கேட்ட விபரம் உண்மையா என்பதை உறுதி செய்யுங்கள்.

Green address-bar

இதுபோல் போலி முகவரி உங்கள் வின்டோவில் வராமல் தடுக்க, இன்டர்நெட் எக்ஸ்ப்லோரர் 7 பயன்படுத்த வேண்டும். பின்னர் Phishing Filter-ரை அமுல்படுத்தவேண்டும். மேலும் விபரங்களுக்கு படத்தின் மேல் க்ளிக் செய்யவும்!

உலக கணிப்புகளின்படி, வருடாவருடம் திருடர்களிடம் ஏமாறுவோர் தொகை அதிகரிப்பதாக புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. கடலில் பல ஆயிரம் மீன்கள் உலாவுகின்றன. நாம் தூண்டில் போடுவது குறிப்பிட்ட ஒரு மீனுக்கு அல்ல, ஏதாவது ஒன்று அகப்படும் என்றுதானே! இதே நிலைதான் இணையத்திலும். திருடர்கள் திருட்டு ஈமெயில் தூண்டில்களை ஆயிரமாயிரமாய் வீசிவிட்டு, அகப்படுபவரின் தலையில் மிளகாய் அரைக்க காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

Wednesday, August 12, 2009

பதிவருக்கு உதவிகரம் நீட்டுங்கள்!!

[nathan.jpg]

இதய நோயால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிட்சைக்காக உதவி வேண்டி காத்திருக்கும் பதிவர் சிங்கை நாதன் எனும் செந்தில் நாதனுக்கு உதவும் உள்ளமிருப்பவர்கள் நண்பர் குசும்பன் எழுதிய இந்தப் பதிவைப் படிக்க வேண்டுகிறேன்!

கழியும் ஒவ்வொரு கணப்பொழுதும் அபாயகரமான நிலையில் செந்தில் நாதன் இருக்கிறார், நாம் கைகொடுத்து அவரை காப்பாற்றுவோம். அவர் விரைவில் நலம்பெறப் நம்மால் முடிந்த பொருள் உதவியினை செய்து.. பிரார்த்திப்போம்!

தமிழகம் மற்றும் சிங்கையில் செந்திலுக்கு உதவ நினைப்பவர்கள் கீழ்கண்ட அக்கவுண்ட்டுகளுக்கு தங்களால் இயன்ற பணத்தை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.

India ICICI Account Details
Account Number: 612801076559
Name: M.KARUNANITHI
Branch: Tanjore

Singapore Account Detais
Account Number: 130-42549-6
Name: Muthaiyan Karunanithi
Bank: DBS - POSB Savings
(Mention in Transaction Remarks as “To Senthilnathan")

அமீரகத்தில் செந்தில் நாதனுக்கு நிதியளிக்க விரும்புவோர் அல்லது பிற வகையான உதவிகளைச் செய்ய விரும்புவோர் கீழே குறிப்பிட்டுள்ள தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தகவல்களைப் பெறலாம்.

ஆசிப் மீரான் - 050/6550245

மிகவும் அவசரமாக, மிகவும் அத்தியாவசியமாக ஒவ்வொரு நொடிப்பொழுதும் உங்கள் உதவிக்கரத்தை எதிர்பார்த்திருக்கும் உறவுகளுக்கு உங்கள் தனிப்பட்ட உதவியாகவும் ஏதாவது செய்யுங்கள். செய்ய முடிவெடுத்தால் அதை அவசரமாகச் செய்யுங்கள்.

Monday, August 10, 2009

ஃபாரின் ரிட்டன்ஸின் அலப்பரைகள்!

என்ன செய்வாங்க.. நம்மாளுங்க வெளிநாடுகளுக்கு போயிட்டு வந்தா? அவங்க பண்ற அலப்பரைகளை பத்திதான் ஆராய்ச்சி பண்ணி கீழ எழுதியிருக்கேன். யாரை வைச்சுடா.. இதையெல்லாம் கண்டுபுடிச்சேன்னு நீங்க கேட்டா.. "துபாயில் இருந்து குசும்பன்", "அமெரிக்காவில் இருந்து டேனியல்", "சிங்கபூரில் இருந்து பித்தன்" ன்னு இவங்களை வச்சிதான் கண்டுபுடிச்சேன்னு சொல்ல மாட்டனனனனே!!


இது ஒரு சீரியஸ் பதிவு! (இப்படி சொன்னாதான் சிரிப்பீங்கன்னு தெரியும்...)

8 கையில மினரல் வாட்டரை வச்சிகிட்டே திரியிவாங்க... (அவங்க சுகாதாரமா இருக்காங்களளளாம்!)

8 வெளி நாட்டிலிருந்து இந்தியாவுக்கு லக்கேஜ் கொண்டு வந்த பேக்கில் உள்ள ஸ்டிக்கரை 4 மாசம் ஆனாலும் கிழிக்க மாட்டாங்க.. (10 லட்ச ரூபாய் லாட்டரி சீட்டு போல, பத்தரமா வச்சிகிட்டு என்ன பண்றாங்களோ?)

8 கேபின் லக்கேஜ் பேக்கை, நம்ம ஊரு ரோட்டுல உருட்டிகிட்டு அல்லது தள்ளிகிட்டு போறதுக்கு முயற்சி செய்வாங்க.. (நம்ம ஊரு ரோட்ல கார் ஓட்டுரதே, சர்கஸ் சாகசம் மாதிரி.. இதுல இதுவேறையா?)

8 குளிக்கவே தேவையில்லாத மாதிரி சென்ட்டு, டியோட்ரன்ட், பாடி ஸ்பிரே அடிச்சிகிட்டு அலையறது (பக்கத்துல நின்னு பேசறவங்களுக்கே.. மறுநாள்தான் அந்த வாசனையே போகும்னா பாத்துகோங்க!)

8 கையேந்தி பவன்ல கூட கிரிடிட் கார்டை எடுத்து நீட்டுவாங்க... (மப்புல இல்ல, மேகம் தெளிவா இருக்கும்போதே!)

8 சுத்தத்தை பத்தி அடிக்கடி மறக்காம கருப்பு எம்.ஜி.ஆர் போல பேசிகிட்டே இருப்பாங்க. ரோட்டு கடையில டீ சாப்டுட்டு, கப்பை கரைக்டா குப்பதொட்டியிலதான் போடுவேன்னு அடம் பிடிப்பாங்க! (வீட்டுல சாப்பிட்ட தட்டை எடுங்கப்பா முதல்ல..)

8 எதைவாங்கினாலும் திர்கம்ஸ்ல யோசிச்சி "ஹேய்.. சாப்பாடு 2 திர்கம்ஸ்தான்!, வாவ்.. மட்டன் கிலோ 10 திர்கம்ஸ்தான்"னு ராமானுஜர் ரேஞ்சிக்கு கணக்கு பண்ணுவாங்க.. (ஜெர்ரி கிங் கூட, புக் எழுதும்போது இப்டி யோசிச்சிருக்க மாட்டாரு!)

8 தும்மலோ.. கொட்டாவியோ.. வந்தா முடிச்சிட்டு "எக்ஸ்சூஸ்மீ" ன்னு சொல்றது... (அப்படி சொல்லும்போது நாம அவங்கள வடிவேலு ரேஞ்சிலதான் பார்போம்ங்கறது வேற விசயம்!!)

8 "செளக்கியமா"ன்னு கேக்காம.. "ஹாய்"ன்னு சொல்றது, "லட்ச"த்துக்கு பதிலா.. "மில்லியன்ல" சொல்றது, தயிருக்கு பதிலா.. "யோகர்டு"ன்னு சொல்றது, "ஹய்வே"க்கு பதிலா "ஃப்ரீவே"ன்னு சொல்றதுன்னு பீட்டருக்கே பீஸா குடுக்குற ரேஞ்சிக்கு பிரிப்பாய்ங்க! (இந்த பாயின்ட் பெங்களூர் பீட்டர்களுக்கும் பொருந்தும்!)

8 சாப்பாட்டுல காரம், மசாலா அயிட்டங்களை தவிர்ப்பது. சாப்பிடறப்பவோ.. இல்லனா, சாப்ட்டு முடிச்ச அப்புறமோ.. கண்டிப்பா "கோக்கோ (அ) பெப்சியோ" இருக்கனுமுன்னு அடம்புடிக்கிறது! (சுகாதாரம்..சுகாதாரம்ன்னு சொல்லிட்டு, டாய்லெட் ஆசிட்டை குடிங்கடே!)

8 சாதா ஹோட்டலுக்கு சாப்பிட போயிட்டு.. "தாபா இருக்கா, ஃபப்பே சிஸ்டம் இல்லியா, குபாக்/குணாஃபா உண்டா" ன்னு சப்ளையருக்கு கொலவெறியை கெளப்புறது! (வீட்ல இதெல்லாம் கேட்டா, சுடுதண்ணியை சுட வைப்பாங்கன்னு தெரிஞ்சிதான்.. ஹோட்டல்ல இந்த அலப்பரை!)

8 வந்த ஏர்லைன்ஸ்ச பத்தி... அந்த ஃபிளைட்ல சீட்டு சரியில்ல, ஜன்னல் பக்கதுல உக்காரமுடியல, பணிபெண்னுக்கு முக்கு சப்பை, கஞ்சப்பசங்க.. சாப்பிட ஒன்னும் குடுக்கல, ன்னு வந்து சேர்ந்துட்டு 2 மாசமா கொறை சொல்லிகிட்டு சுத்துறது.. (யப்பா.. சாமீகளா! பணம் டிராவல் பண்றதுக்கு மட்டும்தான், ஃபிளைடையே உங்க பேருக்கு எழுதி வைக்கல!)

8 கடைசியா ஆனா நங்குன்னு ஒன்னு...

எதை சொல்ல வந்தாலும்.. "இப்படிதான் துபாய்ல...", "இப்படிதான் நான் சிங்கபூர்ல இருந்தப்ப... " ன்னு ஆரம்பிப்பாங்க!!

(மேலே உள்ளது பாதி அடியேனும் செய்வேன்னு.. யாராவது போட்டு குடுக்குறதுக்கு முன்னாடி, நானே ஒத்துகுறேன் மக்களே!!)

Monday, August 3, 2009

கலக்கல் - 2

--------------------------------------------------------------------------------------------

ரத்த
ஜோசியம் (தலைப்பே டெரரா இருக்கு..)
ஜப்பானில் பிளட் குரூப்பை வைத்து ஆராய்ச்சி செய்து, மனிதர்களுடைய குணாதிசியங்களை கீழ் கானும்படி வகைப்படுத்தியுள்ளனர். நீங்கள் என்ன குணங்களை கொண்டவர் என்பதை காசு கொடுக்காமலையே தெரிஞ்சிக்கோங்க... (பின்னூட்டத்தில.. கிளி ஜோசியர் ரேஞ்சிக்கு கிளம்பிடாதீங்கப்பு!!)

O குரூப் - நீங்கள் தலைவராக கூடிய எல்லா திறமைகளும் கொண்டவர். நீங்கள் ஒரு காரியத்தை சாதிக்க வேண்டும் என்று நினைத்தால், எப்பேர்பட்டாவது அதை முடிக்காமல் விட மாட்டீர்கள்.. அவ்வளவு தன்நம்பிக்கை. நீங்கள் ஒரு வழிகாட்டியாகவும், நம்பிகையானவராகவும், அன்பானவராகவும் இருப்பீர்கள்! உங்களிடம் உள்ள தீய குணங்கள் - பொறாமையும், தற்பெருமையும்!

A குரூப் - கட்டுக்கோப்பான, அமைதியை விரும்பும், குழுக்களாக பணி செய்யும் குணம் உள்ளவர் நீங்கள். நீங்கள் கூட்டு முயற்ச்சியே வெற்றியை தரும் என்று ஆணித்தனமாக நம்புபவர். அமைதியாக இருப்பதும், தன்மையாக பேசுவதும் இயல்பாக கொண்டவர் நீங்கள். உங்களிடம் உள்ள தீய குணங்கள் என்று பார்த்தால் - வளைந்து கொடுக்காததும், இறுக்கமாக இருப்பதும்தான்!

B குரூப் - நீங்கள் ஒரு தனிமை விரும்பி. யார் எதை சொன்னாலும்.. நீங்கள் என்ன முடிவு செய்கின்றீர்களோ, அதைதான் செய்வீர்கள். நேர்மையாக, கருணை, புதியவை புகுத்தல் ஆகியவை இயல்பாக கொண்டவர் நீங்கள்.. உங்களிடம் உள்ள தீய குணங்கள் என்றால் - உங்கள் கருத்தை.. அடுத்தவர் மீது தினிப்பது, விட்டுகொடுக்காததும் தான்!

AB குரூப் - நீங்கள் ஜாலியான ஆனால், கட்டுகோப்பான பேர்வழிகள். நீங்கள் எங்கு இருக்கிறீர்களோ, அங்கு கலகலப்பாக வைத்திருப்பீர்கள். உங்களிடம் பழகுவது மிகவும் சுலபம். உங்களிடம் உள்ள தீய குணங்கள் என்றால் - அலட்சியம் மற்றும், முடிவு எடுப்பதில் தடுமாற்றம்!
--------------------------------------------------------------------------------------------

"பார்த்ததிலேயே உனக்கு பிடித்த திரைப்படம் எது?'' என்று நண்பர் கார்த்திக்கேயன் கேட்டபோது நான் சொன்னேன் - "பார்த்ததில் பிடித்தது பல. ரசித்தது சில. ஆனால், என்னை வியக்க மற்றும் திடுக்கிட வைத்த படம், ஒன்றே ஒன்றுதான். என்ன படம் தெரியுமா? 2003ல் வெளியாகிய பார்க் சான்ஊக் இயக்கியிருக்கும் "ஓல்டு பாய்" என்ற கொரிய படம்தான்.

எதற்க்கு என்று தெரியாமலே 15 வருட சிறை வாசம், சிறையில் இருக்கும்போதே மனைவியின் மரணம் மற்றும் குழந்தையின் மறைதலும், ஏன்.. எதற்க்கு என்று கண்டுபிடிக்க, 5 நாட்கள் மட்டுமே விடுதலை. இதுபோல் முடிவு கொண்ட படம் இருக்குமா என்று நாம் சிந்திக்ககூட முடியாதபடி முடிவு, நாவடக்காமையினால் வரும் வினை, பழிவாங்குதலின் உச்சக்கட்ட வெறி என்று இயக்குனர் கதை சொல்லிய விதம் அசாதாரணமானது. இதுபோல் கதை தமிழில் நினைத்துபார்க்க முடியுமா?????????????

மெமன்ட்டோ மற்றும் டெட்மேன் ஷூஸ் ஆகிய பழிவாங்குதல் வகை படங்கள் உலக அளவில் பேசப்பட்டாலும்.. முதல் இடத்தை பிடிப்பது "ஓல்ட் பாய்" மட்டுமே!!

ஒடஞ்ச சி.டி பீஸ்: இதே கதையை (முடிவை மாற்றி) ஹிந்தியில் சஞ்சய் தத் நடித்து "ஜிந்தா" என்று எடுத்தார்கள்... பார்த்துட்டு சி.டி யை ஒடச்சி போட்டுடேன்!!

--------------------------------------------------------------------------------------------

மினி கதை:

ஒரு அப்பாவும், 4 வயது மகனும் அவர்களுடைய புதிய காரை துடைத்துக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது சிறுவன் ஒரு சிறிய கல்லை எடுத்து காரின் கதவு பக்கத்தில் சுரண்டி கொண்டிருந்தான். சத்தத்தை கேட்ட அப்பாவுக்கு கோபம் தலைகேறியது.. கடுப்பில் மகனுடைய கையை பிடித்து, நான்கு முறை உள்ளங்கையில் விளாசிவிட்டார். அப்பொழுதுதான் கவனித்தார் அவர் அடித்தது ஸ்பேனரை கொண்டு என்பதை.

மருத்துவமனையில், பல எலும்புகள் முறிந்துவிட்டதால்.. இனி விரல்களை குணமாக்கமுடியாது என்று மருத்துவர்கள் கைவிரித்தனர். மகன் வலி நிறைந்த கண்களுடன் அப்பாவை பார்த்து "அப்பா.. என்னோட விரல்ளுங்க திரும்ப வளர்ந்துடும் இல்லப்பா?" என்று கேட்டவுடன், கண்ணீருடன் மவுனமாக வெளியே வந்தார்.

வெளியில் நின்றிருந்த காரை பல தடவைகள் எட்டி, எட்டி உதைத்தார். கண்ணீருடன் தலையில் கையை வைத்துகொண்டு காரின் முன்பு உக்கார்ந்துவிட்டார். அப்பொழுதுதான் அந்த கீரல்களை கவனித்தார் என்ன எழுதியிருகிறது என்று.. அந்த வாசகம் " ஐ லவ் யூ அப்பா".

மனிதர்களை பயன்படுத்துகிறோம்! பொருட்களை நேசிக்கிறோம்!! அதை மாற்றி எப்பொழுதுதான் மனிதனை நேசித்து, பொருட்களை பயன்படுத்த போகின்றோமோ?

--------------------------------------------------------------------------------------------

கலக்கல் பாகம் -1 படிக்க..


Blog Widget by LinkWithin