Thursday, May 28, 2009

நானும் செயின் ரியாக்ஷனும் (அதாங்க சங்கிலித்தொடர்)


இது ஒரு தொடர் பதிவு... (நம்மகிட்ட மாட்டுனதனால டெரர் பதிவு)

ஆரம்பித்தவர் நிலாவும் அம்மாவும். (மாட்டினது நானும் என் தூக்கமும்)
-------------------------------------------------------------------------------------------
1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?
மை டியர் அப்பா வச்ச பெயர் : கலையரசன். கலைகள் எல்லாவற்றிற்கும் அரசனாக இருக்கனுமுன்னு நனைச்சி வச்சாராம்.
(கள புடுங்க கூட லாயிக்கு இல்லங்கறது வேற விசயம்..)
எனக்கு புடிச்ச பேருதான், என் நண்பர்கள் கூப்பிடும்போது ரொம்ப பிடிக்கும்..
(பாதி பேரு, கலை அப்புடினா பொண்னுன்னு நனைச்சிக்கிறானுங்க!)

2.கடைசியாக அழுதது எப்பொழுது?
மே 22 2009 (மாவீரன்இல்லியே.. இனி என் மக்களுக்காக போராட என்று என்னியபொழுது)

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
பின்ன? நா பல டைப்புல எழுதுவங்க.. ஸ்லேன்டிங், ரன்னிங், செப்பரேட்டட் /ன்னு எந்த எந்த ஆசிரியர்களுக்கு எப்டி புடிக்குதோ.. அப்டி! இந்த டக்கால்டி திறமையை(?) வச்சி பல பிகர்களை(?) திரும்பி பார்க்க வச்சிருக்கேன்! (நம்பவா போறீங்க..)

4).பிடித்த மதிய உணவு என்ன?
நான்-வெஜ் எல்லாமே பிடிக்கும் (மீன் தவிர). அதுவும் அம்மா செய்யுற வெரைட்டீஸ் இருக்கே...முனியான்டி விலாஸ் தோத்துது போங்க.. எரா,வாத்து,கொக்கு,முயல்,காடை,கவுதாரி, நொள்ளமடையான், இன்னும் சொன்னா கமென்ட்ஸ்ல ஏன் பாம்பு, தவளை எல்லாம் விட்டுடீங்கன்னு கேப்பீங்க.. சோ, ஸ்டாப்!
(சுருக்கமா சொன்னா சாப்பிடுற விஷயத்துல, என் பிரண்ட்ஸ என்ன கூப்புடுற பேரு : குறவன்)

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
அதான் பாஸ் நம்ம ஸ்பேஷாலிட்டியே... அரை மணி நேரம் பேசுனா போதும், நம்ம நண்பர்தான் நீங்க! என்க்கு நட்பு வட்டாரம் ரொம்ம்ம்பபப பெருசு... ஆனா அதுல நன்மையும் இருக்கு தீமையும் இருக்கு.

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
அருவி குளியல்: கடைசியா குற்றாலத்துல குளிச்சது... தலை மடங்கி உடம்புகுள்ள போற மாதிரி...
"கடல்தான் நம்ம பேவரேட்" கடலூர், தரங்கம்பாடி, வேளாங்கண்ணி- கடல்களை கேட்டா எங்க கதை சொல்லும்!

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
அப்படி எதுவும் குறிப்பிட்டு சொல்ல முடியாது.. முதல் தடவபார்க்கும் போது, டிரஸ் சென்ஸ் & பேசுற விதம் இததான் கவனிக்கமுடியும்

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
பிடிச்ச விஷயம்: என்ன பத்தி நானே எப்படி ? ஹி.. ஹி
பிடிக்காத விஷயம் : கோபம்! (மூன்று எழுத்து.. ஆனா அது பண்ற அழும்பு, ஆற்ற முடியாது)

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
பிடிச்ச விஷயம்: எது சொன்னாலும் சரிங்க... செய்யறங்க..ன்னு சொல்லுற விதம் பிடிக்கும்!
பிடிக்காத விஷயம் : எது சொன்னாலும் சரிங்க..செய்யறங்க..ன்னு சொல்லிட்டு செய்யாம இருக்குறது!
(அடிக்கு பயந்து உண்மைய சொல்லா இருக்க முடியுமா?)


10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?
அம்மாவும்.. நண்பர்களும்..

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?
கருப்பு நிற தேநீர் சட்டை(டீ ஷர்ட்), சாம்பல் நிற அரை குழாய் (ஷார்ட்ஸ்)
(ரொம்ம்மபப முக்கியம்.. அப்டின்னு நீங்க சொல்றது கேட்குது)

12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
வசப்பாட்டு தான்!
(நண்பன் சாப்பிட போலாமுன்னு கூப்பிட்டு அரைமணி நேரமாச்சி, அதுகா திட்டுவான் இப்டி?)

13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
கருப்புதான்..(என் ரூம் வாஷ் பேஸின் & குலோசெட் கூட கருப்புனா பாத்துகோங்க, நமக்கு எவ்ளோ புடிக்கும் அந்த கலர்ன்னு!)

14.பிடித்த மணம்?
தமிழ்மணம் அப்டின்னு சொல்லி உங்கள வெறுப்பேத்தாம...
மல்லிகைமணம்- ன்னு சொல்லி உங்க மணசுல இடம்பிடிக்கிறேன்!

15.நீங்க அழைக்கப் போகும் ஏன் உங்களுக்கு பிடித்த உள்ள. அவரை அழைக்கக் காரணம் என்ன ?

ஜாக்கி சேகர் : கடலூர்காரர்.. ஆல்இன்ஆல் அழகுராஜா! இரண்டு வருடமாக பதிவெழுதி பலரை (என்னையும் சேர்த்து) கொள்ளை அடித்தவர்... இன்னும் 3 பதிவுகள் எழுதினால் 200 பதிவுகளை தொடுபவர். அவருக்கு என் வாழ்த்துக்களும்... அழைப்பிதழும்!

அக்னிபார்வை :லவ்ஸ் கட்டி பதிவிடுபவர், வித்தியாசமான எழுத்துக்களால் வாசகர்களை தன் வசம் கட்டிவைத்துள்ளார் (அன்பாலதாங்க!). 100 பதிவுக்கு மேல் எழுதி 200 நோக்கி வெற்றி நடைபோடுறாரு, பறக்குறாரு, சீருறாரு..அவர நா இங்க மாட்டிவிடுறேன்.. சங்கிலி தொடராமுல்ல, எழுதலனா சாமிகுத்தம்!

இனியவன்: இளைமையான & நகைச்சுவையான எழுத்துக்கு சொந்தகாரர்... வந்த கொச்ச நாட்களிலேயே, பல பதிவர்களை திரும்பி பார்க்க வைத்தவர். அவருக்கு நம்ம வாழ்த்தும், அழைப்பும்!

(ஆங்கில மற்றும் வது விமர்சனத்தால் பின்னி பெடல் எடுத்து, நோன்டி நொங்கெடுப்பவர்.... அவருடைய எளிமையான எழுத்துக்களுக்கு நான் ரசிகன்! அப்படின்னு வண்ணத்துபூச்சியாரை கூப்பிடலாமுன்னு டைப் பன்னிட்டேன்.. அதுகுள்ள ஜெஸ்ட் மிஸ்சு! எம்மாம் பாஸ்டா இருக்காய்ங்க!)

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?
பதிவுலக அருமை நண்பன் கிஷோரின் : வெளிநாட்டு மோகம் என்ற பதிவு. என் மனசுல இருந்தத அப்படியே எழுதி இருந்தான்!
(என்ன அப்டி பாக்குறீங்க? அந்த பதிவ நா எழுதி தரல அவனுக்கு..)

17. பிடித்த விளையாட்டு?
ஷட்டில்
சுக்ரீவனின் அண்ணன் பந்து, அதாங்க.. வாலிபால்!
ரம்யா.. சே, ரம்மின்னு டப் பன்னா அப்டி வருது!
(மவனே.. ஒழுங்கா பதில் சொல்டானு, நீங்க சொல்றது காதுல விழுது..)

18.கண்ணாடி அணிபவரா?
இல்லை!
(கண்ணாடி எதுக்குனா அணியனும்? தலை சீவுற அப்ப பார்த்தா மட்டும் போதாது?)

19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?
திரில்லர், உண்மை கதை, காமெடி

20.கடைசியாகப் பார்த்த படம்?
The Curious Case of Benjamin Button [2008]

21.பிடித்த பருவ காலம் எது?
ஐஸ் ஏஜ்! அப்டின்னு சொல்ல ஆசதான், ஆனா அப்ப நா பொறக்கலையே.. அதனால எந்த காலமாக இருந்தாலும் புடிக்கும், ராகுகாலத்தை தவிர!

22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்:
The Complete Idiots Guide to Tantric sex- அப்டின்னு சொன்னா புக்கு கேட்டு வருவீங்க என்பதால... Murphy's Laws 1000 - படிக்கிறேன்.

23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
அத எதுக்கு மாத்தனும்?

24.உங்களுக்கு பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
பிடித்த சப்தம் : அமைதியின் சத்தம்
பிடிக்காத சப்தம்: டி.வி. சத்தம் அதிகமானால்..

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
வேற எங்க.. துபாய்தான்!

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
இருக்குனு சொன்ன நம்பவா போறீங்க?

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
என் அப்பாவின் இழப்பு!

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
அப்படியே கோவிச்சிக்காம, மேல போயி 8வது கேள்விக்கு 2 வது பதில படிச்சுக்குங்க.. (படிக்கலனா.. டென்ஸ்சனாயிடுவேன், ஆமா!)

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
வேளாங்கண்ணி.. தமிழ்நாட்டு கோவா! எத்தனை முறை போனாலும் எங்களுக்கு சலிக்கவே சலிக்காத ஊர்..பீச்சுல 2 மணி நேரம் உழுந்து பொறன்டுட்டு, கரையில உக்காந்து பீர் அடிச்சிகிட்டே, பிரஷா சூடா வருத்த எரா வை சாப்டா... யப்பா! எப்படா ஆகஸ்ட் மாசம் வருண்னு இருக்கு (அப்பதான் எனக்கு லீவு)

30.எப்படி இருக்கணும்னு ஆசை?
கர்ணன் போல : நாம செத்தாலும், நம்ம செஞ்சது வாழனும்!

31.கணவர்/மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம் ?
நெறைய இருக்குங்கண்ணா.. அப்புறமா நேருல சொல்றேன், சபையில சொல்ல முடியாது!
(இத படிச்சிபாத்துட்டு மன்டையில மொத்தறதுக்கா?)

32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?
கொடுங்கள்! பெறுங்கள்!!

43 comments:

Unknown said...

//வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?
கொடுங்கள்! பெறுங்கள்!//

அருமை........

kishore said...

//கலைகள் எல்லாவற்றிற்கும் அரசனாக இருக்கனுமுன்னு நனைச்சி வச்சாராம்.
(கள புடுங்க கூட லாயிக்கு இல்லங்கறது வேற விசயம்..)//
கள புடுங்க லாயிக்கு இல்லாமலா துபாய் ல ஆணி புடுங்குற?

//(சுருக்கமா சொன்னா சாப்பிடுற விஷயத்துல, என் பிரண்ட்ஸ என்ன கூப்புடுற பேரு : குறவன்)//
முடியல ... எல்லா விஷயத்துலயும் போட்டியா வந்துடுற...

கலையரசன் said...

ஆகா.. 5நிமிஷம் ஆகலப்பா.. அதுகுள்ளயே, நொங்கறாங்க!
வாங்க... மாப்பு கிஷோரு! உங்களால எவ்வ்வளவு முடியுமோ, அவ்வளவு பன்னுங்க!

kishore said...

/கருப்பு நிற தேநீர் சட்டை(டீ ஷர்ட்), சாம்பல் நிற அரை குழாய் (ஷார்ட்ஸ்)//
தமிழ் இனி மெல்ல சாகும்னு சரியா தான் சொல்லி இருகாங்க ..
//வசப்பாட்டு தான்!//
காலர் டியுன் ஆ வச்சிடு மச்சி...

//(என்ன அப்டி பாக்குறீங்க? அந்த பதிவ நா எழுதி தரல அவனுக்கு..)//

டேய் என்கிட்டயே டகால்டியா ?

// Murphy's Laws 1000 - படிக்கிறேன்.//

என்ன மச்சி இது ? நீ வழக்கமா படிக்கிற அந்த மாதிரி மேட்டர் புக் ஆ ?

ப்ரியமுடன் வசந்த் said...

//31.கணவர்/மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம் ?
நெறைய இருக்குங்கண்ணா.. அப்புறமா நேருல சொல்றேன், சபையில சொல்ல முடியாது!
(இத படிச்சிபாத்துட்டு மன்டையில மொத்தறதுக்கா?)//

இதுவரைக்கும் எத்தினிவாட்டி மொத்துவாங்கிருக்கீங்க?

ப்ரியமுடன் வசந்த் said...

//17. பிடித்த விளையாட்டு?
ஷட்டில்
சுக்ரீவனின் அண்ணன் பந்து, அதாங்க.. வாலிபால்!///

எப்பிடிங்க இப்பிடியெல்லாம்?

கலையரசன் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி என் பக்கம்!

கலையரசன் said...

for kishore
//தமிழ் இனி மெல்ல சாகும்னு சரியா தான் சொல்லி இருகாங்க ..//
இனிமேதான் சாகடிக்கனுமா மச்சி, அது இன்னம் சாகல?


//டேய் என்கிட்டயே டகால்டியா ?//
எத்தினி பேர கலாய்ச்சிருப்ப நீ, சேம் பிளட்?

//என்ன மச்சி இது ? நீ வழக்கமா படிக்கிற அந்த மாதிரி மேட்டர் புக் ஆ ?//
நீ கேட்டுடுவன்னு தெரிஞ்சி தான சயின்ஸ் படிக்கிறேன்

கலையரசன் said...

//இதுவரைக்கும் எத்தினிவாட்டி மொத்துவாங்கிருக்கீங்க?//
உங்க வாய் புண்ணியத்துல இனிமேதான் வாங்கனும் வசந்த்..

//சுக்ரீவனின் அண்ணன் பந்து, அதாங்க.. வாலிபால்!
எப்பிடிங்க இப்பிடியெல்லாம்?//

தானா வருது... உங்க கூட சேர்ந்ததால...

வினோத் கெளதம் said...

//கள புடுங்க கூட லாயிக்கு இல்லங்கறது வேற விசயம்..)//

நம்மள மாதிர்யே..

//சுக்ரீவனின் அண்ணன் பந்து, அதாங்க.. வாலிபால்!//

தாங்கல..

//The Complete Idiots Guide to Tantric sex- அப்டின்னு சொன்னா புக்கு கேட்டு வருவீங்க என்பதால... Murphy's Laws 1000 - படிக்கிறேன்.//

இதை நாங்க நம்பனும்..அன்னிக்கு கேட்டப்ப வேற அதோ புக் பேர் சொன்னியே..அஜால் குஜாலா..

//வேளாங்கண்ணி.. தமிழ்நாட்டு கோவா!//

எனக்கு பிடிச்சது பூம்புகார்..ஒரு சித்ரா பௌர்ணமி அன்னிக்கு Full Throttleல சிதம்பரத்தில் இருந்து கிளம்பி போனோம்..மறக்கவே முடியாத அனுபவம்..

Anonymous said...

சளைக்காத பதில்... நல்ல இருக்கு!

கலையரசன் said...

மாப்பு வினோத்துக்கு..

//நம்மள மாதிர்யே..//
அத வேற சொல்லி காட்டனுமா

//தாங்கல..//
முடியிலனா கீழ வச்சிடு!

//இதை நாங்க நம்பனும்..அன்னிக்கு கேட்டப்ப வேற அதோ புக் பேர் சொன்னியே..அஜால் குஜாலா..//
விடு விடு லூசுல விடு.. இதலாம் சட்டசபையில பேசிகிட்டு..

//எனக்கு பிடிச்சது பூம்புகார்..ஒரு சித்ரா பௌர்ணமி அன்னிக்கு Full Throttleல சிதம்பரத்தில் இருந்து கிளம்பி போனோம்..மறக்கவே முடியாத அனுபவம்//
அத பத்தி ஒரு பதிவு போடு.. நாங்களும் தெரிஞ்சிக்கிறோம்!

கலையரசன் said...

வாங்க கனவுகள் + கற்பனைகள், கவின்
உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கு நன்றிகள்!!

வெற்றி-[க்]-கதிரவன் said...

//2.கடைசியாக அழுதது எப்பொழுது?
மே 22 2009 (மாவீரன்இல்லியே.. இனி என் மக்களுக்காக போராட என்று என்னியபொழுது)//

-:(

Jackiesekar said...

அற்புதமா எழுதி இருக்க ஆனா என்னைய ஏன்யா மாட்டி விட்ட? கொஞ்சம் பொறுமையா எழுதுறேக் பராவாயில்லையா, அதே கேள்விதானே? கொஞ்சம் டைம் கொடு கண்டிப்பா எழுதறேன்

கலையரசன் said...

வருகைக்கு நன்றி பித்தன் !

கலையரசன் said...

for jackiesekar

ஏன் மாட்டிவிட்டேனா? எண்னான்ன நீ.. உன்ன விட்ட எனக்கு வேற யாரு இருக்கா?
அதே கேள்விதான்... பட் பதில் வேற போடனும்!
டேக் யுவர் ஓன் டைம். ஆனா, 200வது பதிப்புக்கு முன்னாடி!

அக்னி பார்வை said...

ஹூஸ்ஸ்ஸ் இப்பவே கண்ன கட்டுதே, நாங்க கேளிவ் கேக்குராங்கன்னு பரிட்ட்சயே எழுதாமெ டிகிரி வாங்குனவுங்க, என் கிடட் இப்படி ரவுண்டு கட்டி கேளிவி கேட்ட என பண்ணுவேன்....

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் நீங்க கலகிட்டீங்க, எனக்கு ஒரு ரெண்டு நாள் டைம் கொடுங்க..

கண்ணா.. said...

//1.(பாதி பேரு, கலை அப்புடினா பொண்னுன்னு நனைச்சிக்கிறானுங்க!) //

அடப்பாவி எத்தனை அப்பாவிகளின் வயித்தெரிச்சலை வாங்கினயோ…?

//2.கடைசியாக அழுதது எப்பொழுது?
மே 22 2009 (மாவீரன்இல்லியே.. இனி என் மக்களுக்காக போராட என்று என்னியபொழுது)//

நெஞ்ச நக்கிட்ட மாப்பு

// (நம்பவா போறீங்க..)//

உன் நம்பிக்கையை நாங்க எதுக்கு வீணாக்கனும் அதுனால நம்பலை மாப்பு

4. எதுக்கும் உன்னை மதியம் ஹோட்டல் கூட்டிகிட்டு போற பிளான ஓத்தி வைச்சுர்றேன்

5. இதுல நீ சொன்னதை நம்புறேன்

6. கடல் கதை சொல்லுறது இருக்கட்டும் ..நீ குளிச்ச கதை சொல்லுமா? அதான் மேட்டர்



//9.பிடிக்காத விஷயம் : எது சொன்னாலும் சரிங்க..செய்யறங்க..ன்னு சொல்லிட்டு செய்யாம இருக்குறது!
(அடிக்கு பயந்து உண்மைய சொல்லா இருக்க முடியுமா?) //

நீ உண்மையிலயே மாவீரன் டா

கலையரசன் said...

//அடப்பாவி எத்தனை அப்பாவிகளின் வயித்தெரிச்சலை வாங்கினயோ…?//
அதுல நீ ஒரு அப்பாவியா?

//நெஞ்ச நக்கிட்ட மாப்பு//
சளி புடிச்சிக்க போகுது, தொட..

//உன் நம்பிக்கையை நாங்க எதுக்கு வீணாக்கனும் அதுனால நம்பலை மாப்பு //
அவ்வளவு நல்லவனா..நீ?

//எதுக்கும் உன்னை மதியம் ஹோட்டல் கூட்டிகிட்டு போற பிளான ஓத்தி வைச்சுர்றேன்//
வாய கொடுத்து வயித்த புண்னாகிகிட்டனா?

//இதுல நீ சொன்னதை நம்புறேன்//
அப்பா.. இந்த ஒன்னையாவது நம்புனியே..

//கடல் கதை சொல்லுறது இருக்கட்டும் ..நீ குளிச்ச கதை சொல்லுமா? அதான் மேட்டர்//
நம்ம சங்கத்து மேட்டரை சபையில பேசாத!

//நீ உண்மையிலயே மாவீரன் டா//
தேங்க்ஸ் மாப்பி!

ப்ரியமுடன் வசந்த் said...

மச்சான்

கூப்பிடலாமில்ல

நீங்க ஒண்ணு செய்ங்க இந்த பின்னூட்டத்தையெல்லாம் எடுத்து அப்பிடியே ஒரு பதிவோ அல்ல ஒரு புத்தகமாவோ போடலாம் மச்சான்

என்னால சிரிப்ப அடக்க முடியல இந்த கம்யூட்டரே என்ன ஒரு மாதிரியா பாக்குதுன்னா நீயே தெரிஞ்சுக்கோ.......

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

எப்படீங்க கலை ரூம் போட்டு யோசிப்பீங்க போல...

கலக்குங்க!!

ஆனா இதே மாதிரி கேள்விகள் வேற மாதிரி பதிலோட ஒரு பதிவு "குட் Blogs" Sectionல வந்திருக்கே!!

http://venkatesh-kanna.blogspot.com/2009/05/blog-post_29.html

உங்க பதில்களும் அருமை!! வாழ்த்துகள்!!

ம்... அங்கயும் போய் கும்மியிருக்கீங்க நீங்க :) எப்படி எல்லாரும் சேர்ந்து தேர்வு எழுதின மாதிரி இருக்கே!! அவரும் துபாய், நீங்களும் துபாய்... எல்லோரும் ரூம் மேட்ஸா?

Suresh Kumar said...

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
பின்ன? நா பல டைப்புல எழுதுவங்க.. ஸ்லேன்டிங், ரன்னிங், செப்பரேட்டட் /ன்னு எந்த எந்த ஆசிரியர்களுக்கு எப்டி புடிக்குதோ.. அப்டி! இந்த டக்கால்டி திறமையை(?) வச்சி பல பிகர்களை(?) திரும்பி பார்க்க வச்சிருக்கேன்! (நம்பவா போறீங்க..)///////////////

உண்மையாவே நம்புறோமுங்க

வேத்தியன் said...

நல்ல சிறப்பான பதில்கள் நண்பரே...

உங்களைப் பற்றி அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி...

கலையரசன் said...

//கூப்பிடலாமில்ல//

என்ன கேள்வி இது மாப்பு..
தாராளமா கூப்பிடு, நன்றி
உன் வருகைக்கு!

கலையரசன் said...

//S Senthilvelan
ஆனா இதே மாதிரி கேள்விகள் வேற
மாதிரி பதிலோட ஒரு பதிவு "குட் Blogs"
Sectionல வந்திருக்கே!!//

நன்றி.. செந்தில் லேட்டா வந்தாலும்..
லேட்டஸ்டா வந்ததற்க்கு!
இது ஒரு தொடர் பதிவு மாப்ஸ்..

Suresh Kumar
//உண்மையாவே நம்புறோமுங்க//
பாஸ்.. எனக்கு ஆனந்த கண்ணீரா வருது..
மொதல் தடவையா என்னை நம்புன
உங்கள நினைச்சி!

//வேத்தியன்
நல்ல சிறப்பான பதில்கள் நண்பரே...//

நன்றிகள் நண்பேர.. பொறுமையா படிச்சதுக்கு!

sakthi said...

.கணவர்/மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம் ?
நெறைய இருக்குங்கண்ணா.. அப்புறமா நேருல சொல்றேன், சபையில சொல்ல முடியாது!
(இத படிச்சிபாத்துட்டு மன்டையில மொத்தறதுக்கா?)

ஹஹஹஹ

ரசித்தேன் உங்கள் பதில்களை

Sukumar said...

கல கல வென்று கலக்கலாய் இருக்கிறது.. உங்கள் பதில்கள் வாழ்த்துக்கள் !
( இரண்டு பதிவுகளுக்கு முன்னால் எனக்கான உங்கள் பதில் பினூட்டத்தை தாமதமாக பார்த்தேன்... உங்கள் இ மெயில் ஐ டி சொல்லுங்கள்... என் மொபைல் எண் அனுப்புகிறேன்,....)

அது ஒரு கனாக் காலம் said...

உண்மை தெரிகிறது உங்கள் வரிகளில் ... நல்லா இருக்கு உங்கள் பதில்கள்.

தீப்பெட்டி said...

நல்லா சுவாரஸ்யமா பதில் சொல்லியிருக்கிங்க..

ரொம்ப அப்பாவியா இருப்பிங்க போல...

வா(வ)ரம் said...

யாருடைய ஓட்டும் தங்களுத் தேவையில்லை.

யாருடைய பின்னூடமும் தேவையில்லை.

படைப்பின் வலிமையை மட்டும் நம்பும்

“வாரம்” இணைய இதழ்(லிங்க் க்ளிக்கி இதழைப் படிக்கவும்)

வெளிவந்துவிட்டது. தங்கள் ஆதரவைத் தாரீர்!!!

முக்கோணம் said...

அருமை...

ங்கொய்யா..!! said...

"குசும்பன் பதிவை சுற்றி வந்த நமிதததா!!!--ஒரு ஜீலீர் ரிப்போர்ட்!!

//

இன்னும் பதிவு போடலையா.. :))))

ராம்.CM said...

நல்லாதான் பதில் சொல்லியிருக்கீங்க... அருமை . வாழ்த்துகள்.!

கலையரசன் said...

sakthi said... ஹஹஹஹ (உங்க சிரிப்புக்கு நன்றி)

Sukumar Swaminathan said... கல கல வென்று கலக்கலாய் இருக்கிறது..
(லக்கலக்கலக்க நன்றி சுகுமார்)

அது ஒரு கனாக் காலம் said... உண்மை தெரிகிறது உங்கள் வரிகளில்
(எப்டி சார் கண்டுபுடிச்சீங்க? நன்றி வந்தமைக்கு!)

கலையரசன் said...

தீப்பெட்டி said... ரொம்ப அப்பாவியா இருப்பிங்க போல...
(நம்பள இன்னுமாடா.. இந்த ஊரு நம்புது? நன்றி தீப்பெட்டி பாஸ்!)

முக்கோணம் said... அருமை...
(நீங்க வந்தது பெருமை!)

நமிதா..! said... இன்னும் பதிவு போடலையா.. :))))
(இப்ப.. உன்ன போட போறேன்! எங்க போனாலும் பின்னாடியே வந்துகிட்டு!)

Joe said...

//
எரா,வாத்து,கொக்கு,முயல்,காடை,கவுதாரி, நொள்ளமடையான்,
//
ஆஹா, இதுக்காகவே உங்களை சந்திச்சு சரக்கடிச்சிட்டு சாப்பிடலாம் போலேருக்கே?

நொள்ளமடையான், அது என்னது?

//
The Complete Idiots Guide to Tantric sex-
//
Reading it is fine, but is there any chance of practising it in the middle east? ;-)

கீழை ராஸா said...

//பிடிக்காத சப்தம்: டி.வி. சத்தம் அதிகமானால்..//
டிவியிலே நேரலை நிகழ்ச்சி நடத்துபவரா நீங்க( பெப்சி உமாவும் இப்படித்தான் சொல்லும்)

கலையரசன் said...

Joe said...
//ஆஹா, இதுக்காகவே உங்களை சந்திச்சு சரக்கடிச்சிட்டு சாப்பிடலாம் போலேருக்கே?//

வா மாப்ஸ், எப்ப வேணா சாப்பிடலாம்.. ஆனா..(எதுக்கு இந்த ஆனான்னு உனகே தெரியும்!)

//நொள்ளமடையான், அது என்னது?//

ஏன் உனக்கு கரப்பாண்பூச்சி சட்னி, தேளு பொறியல் மட்டுந்தான் தெரியுமா?
நொள்ளமடையான் என்னான்னு தெரியாதா?


//any chance of practising it in the middle east? ;-)//
இல்லன்னு சொன்ன ஒக்கலஹோமாவிலேருந்து அனுப்புரியா?
(ஏன்பா.. நீ இருக்கிற ஊர் பேரே ஒரு மாதிரியா இருக்கு?)

கலையரசன் said...

ராம்.CM said...
//நன்றி ராம்... அதுஎன்ன சி.எம்?//

கீழை ராஸா said...
//( பெப்சி உமாவும் இப்படித்தான் சொல்லும்)//
நன்றி ராஸா!
உமா அப்படியா சொல்லும்? (எப்டி கவனிச்சிருக்காரு பாருங்க..)

குசும்பன் said...

ஆமா மேல வயசுக்கு வந்த புள்ள மாதிரி எட்டிபார்க்கும் அந்த மஞ்சள் தேச்சு குளிச்சபுள்ள!

குசும்பன் said...

யாரு?

SENATHIPATHY.K said...

friend i am stop my word verification .thanx 4 u r advice


by shiyamsena

shiyamtamil.blogspot.com

Blog Widget by LinkWithin