Monday, October 12, 2009

ஆபீசும் ஜெயிலும் ஒண்ணுதான்!!


ரொம்ப
சீரியசா எல்லாம் எழுத கூடாதுன்னு எங்க ஆயா சத்தியம் வாங்கிட்டு அப்பீட் ஆகிட்டாங்க என்பதால, சீரியசா எழுதுனா ஒரு பயபுள்ளையும் கமெண்ட் போடமாடேங்குது என்பதால, ஆப்பீஸ்ல இன்னைக்ககு வேலை இல்லை என்பதால, இந்த இடுகை வருங்கால் நகுக! (என்னைக்கிடா உனக்கு வேலை இருந்துதுன்னு எல்லாம் என் மேனேஜர் மாதிரி கேட்ககூடாது!)

தலைவரு 'ராஜாதிராஜா' படத்துல பாடியிருப்பாரு, "உலக வாழ்கையே ஒரு ஜெயிலு வாழ்கைதான்" ன்னு. ஆனா அதை மாத்தி இப்படி பாடியிருக்கனும்!
"ஆபீஸ் வாழ்கையே ஒரு ஜெயிலு வாழ்கைதான்..
அதில் உலவும் பேரெல்லாம் ஒரு கைதி போலதான்!"


* ஜெயில்ல உங்க பெரும்பான்மையான நேரத்தை பத்துக்கு பத்து ரூம்ல கழிப்பீங்க!
* ஆபீஸ்ல உங்க பெரும்பான்மையான நேரத்தை எட்டுக்கு எட்டு பொட்டியில முழிப்பீங்க!!

* ஜெயில்ல மணியடிச்சா மூணு வேளை சோறு போடுவாங்க ஓசியில!
* ஆபீஸ்ல ஒரு வேளை சாப்பாட்டுதான் நேரமே கிடைக்கும்!! (அதுவும் காசு குடுத்து சாப்பிடுறது, இன்னொரு வயித்தெரிச்சலு!)

* ஜெயில்ல நன்னடத்தைக்கு தண்டனை காலத்தை குறைப்பாங்க!
* ஆபீஸ்ல நன்னடத்தைக்கு இன்னம் கொஞ்சம் வேலையை குடுத்து பென்டை நிமுத்துவாங்க!!

* ஜெயில்ல உங்க ரூமுக்கு போகனுமன்னா போலீஸ்காரனே கதவை திறந்து விடுவாங்க!
* ஆபீஸ்ல உங்க நாய் லைசன்சை காட்டிட்டு (அ) தேச்சிட்டு நம்மலே கதவை திறந்து உள்ளபோயி குந்திகினும்!!

* ஜெயில்ல நீங்க டி.வி. பாக்கலாம், புக் படிக்கலாம், தூங்கலாம், எக்சட்ரா.. எக்சட்ரா..
* ஆபீஸ்ல நீங்க டி.வி பார்த்தீங்க.. இல்ல சேட் பண்ணீங்க.. டேமேஜர் உங்க கொமட்டுலேயே குத்துவாரு!!

* ஜெயில்ல உங்களுக்கு சொந்தமா, தனியா டாய்லெட் இருக்கும் உங்க ரூம்ல!
* ஆபீஸ்ல பப்ளிக் டாய்லெட் போல எல்லாரும் யூஸ் பண்றதைதான் நாமும் யூஸ் பண்ணணும்!! (அதுல சிலபேரு.. உக்காருற இடத்துலதான் ஒன்னுக்கு அடிச்சி வைப்பான்!)

* ஜெயில்ல பொண்டாட்டி, புள்ளைங்க, நண்பர்கள்-ன்னு எல்லாரும் வந்து பார்க்கலாம்!
* ஆபீஸ்ல நண்பர்கள் வந்திருந்து பேசுனா கூட, ஆப்பீஸ் டைம்ல வேலையை பாருடா வென்றுன்னு ரிசப்ஷன்ல உள்ள புவரான ரிச்சா கூட ரிவீட் அடிப்பா!!

* ஜெயில்ல ஒன்னியும் வேலை செய்ய வோணாம். செலவை எல்லாம் வரி கட்ரவனுங்கோ துட்டு!
* ஆபீஸ்ல வேலை செஞ்ச சம்பளத்துல வரியை கழிச்சிட்டு குடுப்பானுங்கோ. ஜெயில்ல உள்ளவங்களுக்கு செலவு செய்ய!! (இந்த இடத்துலதான் கொஞ்சம் தடுமாறிட்டேன்.. ஜெயிலுக்கே பூடலாமான்னு!!)

* ஜெயில்ல உள்ள ஒரே கஷ்டம் அங்க உள்ள கொடூரமான வார்டனை சமாளிக்கிறதுதான்!
* ஆபீஸ்ல அவங்க பேரை டீசன்டா மேனேஜருன்னு சொல்லுவாங்க!!

(ஓகே.. ஓகே.. அந்த டீசன்டான ஆளு வர்றாரு! நான் எஸ்சாயிக்கிறேன்.. நீங்க கீழ உள்ள வீடியோவை பாத்து என்ஜாய் பண்ணுங்க!!)


Saturday, October 3, 2009

ஸ்டிரிக்ட்லி... "லவ்வர்ஸ் ஒன்லி"

நம்ம கிஷோரு ஒரு பொண்ணை சின்சியரா லவ் பண்ணிகிட்டு இருந்தாரு! (அவன் லவ் எல்லாம் பண்றானா?, அவனுக்கு லவ்வு ஒரு கேடா?-ன்னு அவனை டிசைன், டிசைனா திட்டனுமுன்னு நினைக்கிறவங்க.. கமெண்ட் மேடைக்கு வந்து ஆசை தீர திட்டலாம்!!) இது அவங்க வீட்டுல அவங்க அப்பாவுக்கு தெரிஞ்சி போயி பொண்ணை, வீட்டுலேயே அடைச்சி வச்சிட்டாரு. நம்ம ஹீரோ கிசோரு சேரன் ரேஞ்சிக்கு ஃபீல் பண்ணி ஒரு லெட்டர் எழுத எனகிட்ட ஐடியா கேட்டாரு.. அதாவது, அவ அப்பா பார்த்தாலும் பிரியாத ரகசிய கடிதம் எழுத சொல்லி... அந்த லெட்டர்தாங்கண்ணா இது! நீங்க முடிச்சா இதுல உள்ள உள்குத்தை கண்டுபுடிச்சு பின்னூட்டத்துல திட்டு.. சாரி! சொல்லுங்க பாப்போம்!!!

நான் உன்மேல வச்சியிருந்த உண்மையான காதல்
போயிடுச்சு! அப்புறம், உன் மேல உள்ள வெறுப்பு
ஒவ்வொறு நாளும் வளர்ந்துகிட்டேதான் இருக்கு. உன்னைய சந்திக்கும்போது,
எனக்கு உன் மூஞ்ச கூட பார்க்க புடிக்கலை!
ஒரு விஷயம் செய்யனுமுன்னு நினைக்கிறேன். என்னன்னா,
வேற நல்ல ஃபிகரை பாக்கலாமுன்னு இருக்கேன். எனக்கு விருப்பமில்ல
உன்ன கல்யாணம் செய்ய. கடைசியா நாம பேசுனப்ப
நீ அறிவுகெட்டதனமா பேசுனதும், அதுவே என்னை
உன்னை மறுபடியும் சந்திகிற ஆசையை தூண்டவே,
தூண்டல. உனக்கு எப்போதுமே, உன்னைய பத்திய நினைப்புதான்.
நாம இரண்டுபேரும் கல்யாணம் பண்ணிகிட்டா என்ன? எனக்கு
தெரியும் வாழ்கையில நா கஷ்டப்படுவேன்னு! எனக்கு எப்பவுமே இல்லை
ஆசை உன்கூட வாழனுமுன்னு. என்கிட்ட நல்லமனசு இருக்கு
சாரி! இருந்துச்சு.. ஆனா, அது இப்பயில்ல
நான் உன்கிட்ட கொடுக்குறதுக்கு. உன்னபோல உலகத்துல யாரும் இல்ல
சுயநலமாவும், முட்டாளாவும். உன்னால முடியாது
என்மேல அன்பு காட்டுறத்துக்கு, உதவி செய்யறத்துக்கு.
ஓப்பனா சொல்லுனுமுன்னா.. நீ நல்லா புரிஞ்சிக்கோ,
நான் உண்மையதான் சொல்றேன். எனக்கு ஒரு உதவி செய்,
இதுதான் முடிவுன்னு நீ நினைச்சா.. திரும்ப முயற்சி பண்ணாத
பதில் எழுத. நீ எழுதின லெட்டர்கள் எல்லாம்
கிழிச்சி போட்டுட்டேன். உனக்கு எப்பவுமே இருந்ததில்ல
என்மேல உண்மையான அன்பு காட்டுதல். குட் பை! சத்தியமா சொல்றேன்
திரும்ப என்னை தொல்ல பண்ணாத. தயவுசெஞ்சு, நினைக்காத
இன்னமும் நான் உன் லவ்வர்ன்னு!!

ஷகிலா: நான் லெட்டர் அனுப்ப மாட்டனே.. ஈ-மெயில் பண்ணுவேன், எஃப் மெயில் பண்ணுவேன், எஸ்.எம்.எஸ். பண்ணுவேன் கார்த்திகேயன் மாதிரி அறிவுத்தேடலோட கேள்வி கேட்காதீங்க!!
---------------------------------------------------------------------------------------------------------------
Blog Widget by LinkWithin