Tuesday, June 30, 2009

இதை படிச்சுட்டு பெண்கள் முறைபாங்க! ஆண்கள் சிரிப்பாங்க!!

சில தத்துவங்கள் (நா சொல்லப்பா..)

  • கல்யாணம் பண்றதுல தப்பில்லை! நல்ல மனைவி அமைந்தால், உங்கள் வாழ்கையில் சந்தோஷம்! இல்லையென்றால் நீங்க தத்துவஞானி!! - சாக்ரடீஸ்
  • தீவிரவாதத்தை பற்றி எனக்கு பயமில்லை, ஏன்னா..நான் கல்யாணம் முடிச்சு 2 வருசம் ஆகுது! - சேம் கினிசன்
  • எனக்கு நடந்த இரண்டு கல்யாணத்திலும் ராசியில்லை.. முதல் மனைவி என்னை விட்டு போயடவிட்டாள்! இரண்டாவது மனைவி இன்னம் கூடவே இருக்கா!! - பேட்ரிக் முரே
  • உலத்திலேயே கடினமான கேள்வி - பெண்களுக்கு என்ன வேண்டும்? என்பதுதான் - சிக்மென்ட் பிராட்.
  • ஒரு நல்ல அருமையான வழி உங்கள் மனைவியின் பிறந்தநாளை ஞாயாபகம் வைத்துக்கொள்ள.. ஒரு தடவை அதை மறப்பதுதான்! - பிராங்களின்.
  • ஒரு நல்ல மனைவி எப்பொழுதும் கனவனை மன்னித்துவிடுவாள், அவள் பக்கம் தப்பு இருந்தால்.. - மில்டன் பியர்லி
  • சந்தோஷமான திருமண வாழ்கையென்பது கொடு பெரு என்ற தத்துவத்தின் அடிப்படைதான். கணவர் கொடுக்கனும்! மனைவி வாங்கிக்கனும்!! - யாரோ
  • "காதல் என்பது நீண்ட அழகான கனவு! கல்யாணம் என்பது அலாரம்!!" - இயான் வுட்
  • பெண்னுக்கு எல்லாமும் வேண்டும், ஒரே "ஆண்" னிடம்!
    ஆனுக்கு ஒன்றே ஒன்று வேண்டும், எல்லா "பெண்" னிடம்!!

ஆண்கள் மட்டும் நம்பும் உண்மைகள்:

  • பீரோ நிறைய துணிமனிகளை அடிக்கி வச்சிகிட்டு, மனைவிமார்கள் டிரஸ்சே இல்லாத மாதிரி "நைட்டியில" அலையறது ஏன்னு பிரியல?
  • 337 அயிட்டத்தை பாத்ரூம் குள்ள வச்சிகிட்டு, போனா போகுதுன்னு 2 பொருட்களை வச்சிக நமக்கு எடம் தர்றது ஏங்க? (அவங்க வச்சிருக்குற பாதி அயிடத்தோட பெயரே தெரியாது நமக்கு)
  • புதுசா கல்யாணமான ஆண் சந்தோஷமாக இருந்தால் ஏன்னு தெரியும்! ஆனா.. கல்யாணமாகி "10 வருடம்" ஆன ஆண் சந்தோஷமா இருந்தா ஏன்னு தெரிய மாட்டுது!!
  • பெண்கள் ஒருமணி நேரமா எழுதுன "மளிகை லிஸ்டை", அவங்க கடைக்கு போகும்போது எடுக்க மறந்துட்டு போறது... ஏங்க?
  • பெண்கள் அவர்களது தோழிகளை அவர்கள் வீட்டில் பாத்து அரட்டை அடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பியதும், "அதே தோழியிடம்" 2 மணி நேரம் போன் செஞ்சு பேசுறது... ஏங்க?
  • பெண்கள் ஷாப்பிங் போகும் போதும், வீட்டை பெருக்கும் போதும், புத்தகம் படிக்கும் போதும், போன் பேசும் போதும், மெயில் அனுப்பும் போதும் மேக்கப் போட்டுகறாங்ளே.. ஏங்க? (மேல இருக்கறது பாதிதான்!!)
  • பெண்கள் சமைக்கும் போது.. இப்படி செய்யி, அப்படி செய்யுன்னு சொல்லாத நம்மல பார்த்து.. கார் அல்லது பைக் ஓட்டுபோது "பிரேக் போடுங்க", "அப்டி வளைக்காதீங்க", "பார்த்து ஓட்டுங்க"ன்னு சொல்றது... ஏங்க?
  • தேவையான பொருளை தள்ளுபடியில போட்டா கூட வாங்க நாம யோசிக்கிறபோது, "தேவையே இல்லாத பொருளை தள்ளுபடியில" போட்டுடாங்கன்னு.. தளராம கிளம்பி, தகதகன்னு தள்ளிகிட்டு வராங்களே... ஏங்க?

    (இன்னும் ஏங்க? போட நிறைய இருந்தாலும்.. என்னோட "ஏங்க" எகிறி..எகிறி அடிப்பாங்க என்பதால, இத்தோட நிறுத்திகிறேன்!)

ஆண்கள் மட்டும் ரசிக்கும் தமாசுகள்

இரு நண்பர்கள், பார்டியில்...
ந1 : "என் மனைவி தேவதை! "
ந2 : "நீ அதிர்ஷ்டசாலி, என் மனைவி உயிரோட இருக்கா!!"

நிச்சயத்தின்போது...
மகன்: "யப்பாடி.. ஒரு வழியா அம்மா மாதிரி பெண் கிடச்சாச்சு!"
அப்பா: "உனக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்!!"

மகன்: "கல்யாணம் செஞ்சா எவ்வளவு செலவாகும்ப்பா?"
அப்பா: "தெரியலப்பா... இன்னமும் செலவு செஞ்சிகிட்டுதான் இருகேன்!!"

மனைவி: "ஏங்க.. திருடுபோன "கிரிடிட் கார்ட்" பத்தி ஏன் போலீஸ் கம்பளென்ட் செய்யல?"
கணவன்: "திருடன் உன்னவிட கம்மியா செலவு பண்றான், அதான்!"

இரண்டு நண்பர்கள் பாரில்...
கண்ணா: சே!.. இந்த பொண்டாடிங்களை அடக்கவே முடியாது போல.. நீ எப்டிடா?
விநோத்: நேத்து என் பொண்டாட்டி முட்டி போட்டு நடக்க வச்சேன்.
கண்ணா: ஆஆ.. அப்புறம்?
விநோத்: அப்புறம் சொன்னா.. "மரியாதையா, ஆம்பள மாதிரி கட்டிலுக்கு கீழ இருந்து வெளிய வந்து சண்ட போடுன்னு!"



பொட்டு பட்டாசு:
மனைவிகிட்ட சண்டை வராமல் இருக்க... 5 வார்தை மந்திரம்!
"என்னை மன்னிச்சிகோ!" & "நீ சொன்னா சரிதான்!"

53 comments:

வெற்றி-[க்]-கதிரவன் said...
This comment has been removed by the author.
வெற்றி-[க்]-கதிரவன் said...

//காதல் என்பது நீண்ட அழகான கனவு! கல்யாணம் என்பது அலாரம்!!" - இயான் வுட் //


-:)))))



இறுதியாக எழுதியவார்த்தைகளை மறக்காமல் ஞாபத்தில் வைத்துக்கொள்ளவும், கூடிய சீக்கிரம் உங்களுக்கு உதவும்.

வாழ்த்துக்கள் அடிமையாக போகின்ற உங்களுக்கு -:)

Jackiesekar said...

ஒரு நல்ல மனைவி எப்பொழுதும் கனவனை மன்னித்துவிடுவாள், அவள் பக்கம் தப்பு இருந்தால்.. - மில்டன் பியர்லி

ரொம்ப அற்புதமா இருந்தது கலை ..என் மனைவிக்கிட்ட படிக்க சொல்லிட்டு ஓடிப்போயிடுறேன்....

அக்னி பார்வை said...

'கலக்கல்’ கலை

சுசி said...

முதல்ல உங்களுக்கு சாபம் குடுக்கலாமான்னு யோசிச்சேன். அதான் நீங்களே போட்டு வாங்கிட்டீங்களே, அப்புறம் எதுக்கு ஒரு சாபத்தை வேஸ்ட் பண்ணனும்னுட்டு மனச மாத்திக்கிட்டேன். நீங்க சொல்லாத பித்துவத்தோட (பின்ன இதெல்லாம் தத்துவமா என்ன) கடைசிய படீங்க.... அதிலேயே உங்க மொத்த இனத்துக்கும் வச்சிட்டீங்களே ஆப்பு!!!!

அப்துல்மாலிக் said...

ஆஹா தல‌

இப்படி எத்தனபேரு கிளம்பிருக்கிய‌

கல்யாணம் கட்டியவுடன் இந்த பிளாக்கை ஓபன் பண்ணி படிக்க சொல்லுங்க... ஹி ஹி ஹிஹ்ஹி

இதுக்குமேலே நான் சொல்ல தேவையில்லை

அப்துல்மாலிக் said...

நீங்க சொன்ன தத்துவம் எல்லாத்தையும் சொன்னவக வெளிநாட்டு காரவக... நாம்தான் என்னாநடந்தாலும் அவங்ககூடதான் காலத்தை தள்ளனும்... அடக்கி வாசிக்கிறதுதான் என்னிக்குமே கைக்கொடுக்கும்...... ஹி ஹி ரொம்ப பேசுரேனோ

நாகா said...

:-)

எட்வின் said...

அருமையான தொகுப்பு . பகிர்வுக்கு நன்றி

எட்வின் said...

//மகன்: "கல்யாணம் செஞ்சா எவ்வளவு செலவாகும்ப்பா?"
அப்பா: "தெரியலப்பா... இன்னமும் செலவு செஞ்சிகிட்டுதான் இருகேன்!!"
// Soooooooooooper

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

//
இரண்டு நண்பர்கள் பாரில்...
கண்ணா: சே!.. இந்த பொண்டாடிங்களை அடக்கவே முடியாது போல.. நீ எப்டிடா?
விநோத்: நேத்து என் பொண்டாட்டி முட்டி போட்டு நடக்க வச்சேன்.
கண்ணா: ஆஆ.. அப்புறம்?
விநோத்: அப்புறம் சொன்னா.. "மரியாதையா, ஆம்பள மாதிரி கட்டிலுக்கு கீழ இருந்து வெளிய வந்து சண்ட போடுன்னு!" //

எல்லா கருத்துக்களுமே கலக்கல்...

ஆமா வினோத்த ஏன் இழுக்குறீங்க.. கண்ணா ஊர்ல இல்லன்னா இப்படியா?

இத எல்லாம் நம்ம கலைக்கு சொந்தக்காரங்க யாராவது அவரு வீட்ல சொல்லுங்க.. பையன் "மனைவி, கணவன்"னு எழுதீட்டு இருக்கான்.. சீக்கரம் செய்ய வேண்டியத செய்யச் சொல்லி :))

வால்பையன் said...

ஒய் ப்ளட்!
சேம் ப்ளட்!

ப்ரியமுடன் வசந்த் said...

//காதல் என்பது நீண்ட அழகான கனவு! கல்யாணம் என்பது அலாரம்!!" - இயான் வுட் //

இது உண்மை

எல்லாமே 50/50

இந்த மேட்டர் எல்லாம் பாத்த உடனே எனக்கு பயமா இருக்கு கல்யாணம் பண்ணுறதுக்கு

வினோத் கெளதம் said...

அனுபவம் பேசுது வேற ஒன்னும் இல்லை..
ஏன் திடிர்னு தத்துவ ஞானி சாக் பீஸ் மாதிரி பேசுறிங்க..

வினோத் கண்ணா ஜோக் ஏன் இந்த கொல வெறி..

கலையரசன் said...

பித்தன் -க்கு
எப்ப பித்தா, எனக்கு கல்யாணம்?

jackiesekar -க்கு
வாங்கண்ணே! ஒடிபோய் பதுகுழியல பதுங்குனாலும், சீரிப்பாயும் பூரிக்கட்டை ஏவுகணை!

கார்க்கி -க்கு
சிரிப்பா இருக்கு.. நல்லா சிரிங்க!

அக்னி பார்வை -க்கு
நன்றி பாஸ்!!

கலையரசன் said...

சுசி -க்கு
முதல் வருகைக்கு நன்றி, யாவரும் நலமா?
வந்தவுடனேயே உட்டிங்களே, ஒரு குத்து! ம்ம்ம..

அபுஅஃப்ஸர் -க்கு
வாங்க தோழா!
நீங்க எப்போதுமே அவங்க
சைடுன்னு தெரியும்...
அடக்கி வாசிக்கிறதுதான் மட்டுமில்ல,
அமுக்கி வாசிக்கிறதுதான் என்னிக்குமே
நல்லது! செஞ்சிடுவோம்..

நாகா -க்கு
ஊமையா நீ? சிரிக்கிற, ஒன்னும் சொல்ல மாட்டியோ?

எட்வின் -க்கு
நீங்க சூப்பர் சொல்றத பாத்தா..
நீங்கதான் அந்த மகனா?

kishore said...

சரி மச்சான்.. இதுல ஒரு காப்பி எடுத்து உங்க வீட்ல குடுத்துடுரேன்.. நீ ஊருக்குள்ள வந்த உடனே உனக்கு கல்யாணம்...

கலையரசன் said...

ச.செந்தில்வேலன் -க்கு
வினோத்தும் கண்ணாவும் இல்லாம என்னால பதிவு எழுத முடியல..
அப்புறம் செந்தில்... அந்த நல்ல காரியத்தை நீங்களே முடிச்சி வைங்க!!

வால்பையன் -க்கு
டேடடடான்ன்ட் கிரை மை பாய்!!

பிரியமுடன் வசந்த் -க்கு
பயமா? உனக்கா? டேய்.. டேய்..
உன்ன மாதரி தில்லாலங்கடிய
நிறைய பாத்துடோமடியோ!

வினோத்கெளதம் -க்கு
ஆமா, இவரு அப்படியே.. சூ.. சீ, யூத்து!
ஏன் தம்பீரிரி... நீ மட்டும்தான் எங்களை
வச்சி கதை எழுதுவியா? பாத்தியில்ல?

கலையரசன் said...

KISHORE -க்கு
நீதான்டா உண்மையான நண்பன்.
உன்ன தவிர வேற யாருக்காச்சும்,
என் பீய்ய்லிங் புரிஞ்சுதாடா?
உன் நட்ப பாத்து என் மூக்கு
ஒழுகுதுடா! தெடச்சிவிடு மாமு!!

geethappriyan said...

கலை இப்போ புரியுது நீங்க ஏன் பதிவு போட இவ்வளவு நாள் எடுக்கறீங்கன்னு? எவ்வளோ ஆராய்சி?கீப் இட் அப்.. லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டு... அதிலும் ஆண்கள் மட்டும் நம்பும் உன்மைகள் சூப்பெரப்பூ.ஓட்டு போட்டாச்சி.. அடுத்த பதிவை சீக்கிரம் எதிர் பார்க்கும் நண்பன்

ஆ.ஞானசேகரன் said...

நல்ல தொகுப்பு, நல்லா அனுபவித்து இருக்கீங்க

Dr.ராம் said...

//(இன்னும் ஏங்க? போட நிறைய இருந்தாலும்.. என்னோட "ஏங்க" எகிறி..எகிறி அடிப்பாங்க என்பதால, இத்தோட நிறுத்திகிறேன்!)//


இத இத இதைத்தான் எதிர்பார்த்தேன் தலைவரே.. ..

ரூம் போட்டு யோசிப்பீங்களோ...

சுசி said...

நீங்க என்ன டாக்டரான்னு கேட்டதுமே இதில ஏதோ உள் குத்து இருக்கும்னு நெனச்சேன். என் மொக்கை பதிவு பக்கம் வந்ததுமே வலி பிச்சிருக்குமே சாரி பறந்திருக்குமே???

Suresh Kumar said...

கலை கலக்கலா தத்துவங்களை சொல்லியிருக்கீங்க

Suresh Kumar said...

எனக்கு நடந்த இரண்டு கல்யாணத்திலும் ராசியில்லை.. முதல் மனைவி என்னை விட்டு போயடவிட்டாள்! இரண்டாவது மனைவி இன்னம் கூடவே இருக்கா!

hahaaa

கிருபாகரன் said...

நன்றாக உள்ளது. அருமை....

jothi said...

என்னங்க தங்கமணிகளை இந்த அளவிற்கு ரவுண்ட் கட்டி கட்டி அடிச்சிருக்கிங்க,.. அடி கொஞ்சம் பலமோ??

jothi said...

பார்த்தேன் ரசித்தேன்,..அருமை

மணிஜி said...

மனைவியாலஜி....நல்லாதான் ஆராய்ச்சி பண்றிங்க..

குசும்பன் said...

கல்யாணத்துக்கு முன்னாடியே உசாரா இருப்பதாக நினைப்பா ராசா?

இருக்கட்டும் இருக்கட்டும்!

Ranjitha said...

Why guys are always pointing out women for each and everything happening in their life..I dont know..
Please realize the fact and then write what do u want to focus..

மௌனமான நேரம் said...

என்னென்னவோ சொல்லறீங்க... ஆமா எனக்கு ஒன்னு மட்டு புரியலீங்க... 'Love After marriage' ஏங்க blank எ இருக்கு?

//உலத்திலேயே கடினமான கேள்வி - பெண்களுக்கு என்ன வேண்டும்? என்பதுதான் //

அப்போ ஆண்களுக்கு என்ன வேண்டும் என்பது ரொம்ப easy ஆன கேள்வியோ??? :)

நீங்க இங்க போட்டிருக்க 'ஏங்க' வுக்கு உங்க ஏங்க ஒண்ணுமே சொல்லலே போலிருக்கே!

Sukumar said...

ஹ ஹ ஹா .... செம கலக்கல் கலை...
சார்ட் செம சூப்பர்...
( இன்னும் பள்ளிக்கூடம் போகலையா பாஸு ?)

Vishnu - விஷ்ணு said...

உங்க வீட்டு முதலாளியம்மா படிச்சுட்டாங்களா? இன்னுமா பூரிகட்டை அடி வாங்காம இருக்கீங்க

சப்ராஸ் அபூ பக்கர் said...

ரொம்ப சுவாரஷ்யமாக இருந்தது உங்கள் பதிவு....(இன்னும் கொஞ்சம் சிரித்துக் கொள்கிறேன்....ஹி......ஹி..........ஹி.............)

வாழ்த்துக்கள் அண்ணா....

அப்படியே எங்கள் வலைக்குள்ளும் கொஞ்சம் வந்து போங்க.....

நாகா said...

//நாகா -க்கு
ஊமையா நீ? சிரிக்கிற, ஒன்னும் சொல்ல மாட்டியோ?//

ஏதாவது பேசி, எதுக்கு வம்பு? இத மாதிரி சென்சிடிவ் சப்ஜெக்ட்ல நான் தலயிடறதே இல்ல :)

பா.ராஜாராம் said...

மனசு விட்டு சிரிச்சாச்சு கலை.இப்படி சிரிச்சு எவ்வளவு காலமாச்சு?...வெரி குட்.வாழ்த்துக்கள்!

Suresh said...

ஒன்னும் ஒன்னும் சிகஸ்ர் மச்சான் ச லேட்டா வந்துட்டேன் ..

சும்மா சிரிச்சு சிரிச்சு நல்லா ரசிச்சேன் எத்துனை ஏங்க ஏங்கனு

அதுவும் அப்பா மகன் ஜோக், நிச்சியம் .. தத்துவம் என்று பின்னிட்ட கலை

உனக்கு பெண் கேட்டு போகும் போது

உங்களை பிடிச்சி இருக்குனு சொல்லனுமா ஏங்க :-0

என்று பெண்ணு சொல்லிட போகுது

இதுக்கு டைடில் செம ஹீட்

சாரு ... ஜெ.. பைத்திகாரன்... நரசிம்.. லக்கி... ஆதிஷா..சுரேஷ்கண்ணா

நாஞ்சில் நாதம் said...

super:)))

sakthi said...

ஏன் எங்க மேல எல்லோரும் கொலை வெறியோட இருக்கீங்க.....
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

முனைவர் இரா.குணசீலன் said...

இளமை விகடனில் வெளிவந்தமைக்கு வாழ்த்துக்கள் நண்பரே.....

கணினி தேசம் said...

பேஷ்!பேஷ்! பதிவு அருமை!


டிஸ்கி: வலையில சிக்க கொஞ்ச நாள்தான் இருக்கு கலை.
அதுக்கப்புறம் இப்படியெல்லாம் எழுத சுதந்திரம் இருக்காது :)))

வாழ்த்துகள்.

சதங்கா (Sathanga) said...

//அப்புறம் சொன்னா.. "மரியாதையா, ஆம்பள மாதிரி கட்டிலுக்கு கீழ இருந்து வெளிய வந்து சண்ட போடுன்னு!" //

செம கலக்கல். எளவட்டங்களுக்கு தான். இப்படி கெளப்பாதீங்கையா பீதிய !!!!! :)))

நட்புடன் ஜமால் said...

வந்தது லேட்டு

சிரிச்சது ஃபாஸ்ட்டு

Deepa said...

:-)))))))

கலையரசன் said...

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் -க்கு
வருகைக்கு நன்றி கார்த்தி, அடுத்த பதிவு சீக்கிரம் போடுவோம்!!

ஆ.ஞானசேகன் -க்கு
அனுபவிக்க போறேன் தலைவா!!

ராம் -க்கு
இல்ல பாஸ் மண்டபம் போட்டு யோசிப்போம்!!

Suresh Kumar -க்கு
சிரிப்புகக்கும், பாராட்டுக்கும் நன்றி!!

கலையரசன் said...

கிருபாகரன் -க்கு
நன்றி சகா!!

jothi -க்கு
கொஞ்சம் பலமாதான் விழுந்தது!!

தண்டோரா -க்கு
ஆரயாச்சி பன்னுவோமுல்ல...

குசும்பன் -க்கு
ஏன் இருக்க கூடாதா ராசா?

Ranjitha -க்கு
சிஸ்டர்.. சும்மா, தமாசுக்கு!!

கலையரசன் said...

மௌனமான நேரம் -க்கு
முதல் வருகைக்கும், அடுக்கான கேள்விகளுக்கும்.. நன்றி!!
அப்புறமா உங்க கேள்விகளுக்கு பதில் செல்றேனே?

Sukumar Swaminathan -க்கு
அடுத்தது பள்ளிக்கூடம்தான் பாஸூ!!

விஷ்ணு. -க்கு
முதலாளியம்மா இன்னம் படிக்கல..

சப்ராஸ் அபூ பக்கர் -க்கு
வந்துடுவோம் சப்ராஸ்!! முதல் வருகைக்கு நன்றி!

பா.ராஜாராம் -க்கு
எனக்கு ரனகளம்.. உங்களுக்கு சிரிப்பு..
ம்ம்..

கலையரசன் said...

Suresh -க்கு
வா, மச்சி! நன்றி வருகைக்கு!!

நாஞ்சில் நாதம் -க்கு
உங்கள் வருகை, சூப்பர்!!

sakthi -க்கு
அவவ்வ்்வ்வ்வ.. யாருதான் உண்மைய சொல்றதாம்?

முனைவர்.இரா.குணசீலன் -க்கு
தெரிவித்தமைக்கு நன்றி நன்பரே!!

கணினி தேசம் -க்கு
உங்கள மாதிரி ஆகிடுவேனா, குமார்?


சதங்கா -க்கு
பயப்படாதிங்க...

நட்புடன் ஜமால் - க்கு
பெஸ்ட்டு!!

Deepa -க்கு
சிரிப்புக்கு நன்றி!!

Dr.ராம் said...

எப்படி பாஸ் எல்லோருக்கும் பதில் சொல்றீங்க.. எங்கேயோ போயிடீங்க

கலையரசன் said...
This comment has been removed by the author.
கலையரசன் said...
This comment has been removed by the author.
கலையரசன் said...
This comment has been removed by the author.
Blog Widget by LinkWithin