
இது ஒரு தொடர் பதிவு... (நம்மகிட்ட மாட்டுனதனால டெரர் பதிவு)
ஆரம்பித்தவர் நிலாவும் அம்மாவும். (மாட்டினது நானும் என் தூக்கமும்)
-------------------------------------------------------------------------------------------
1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?
மை டியர் அப்பா வச்ச பெயர் : கலையரசன். கலைகள் எல்லாவற்றிற்கும் அரசனாக இருக்கனுமுன்னு நனைச்சி வச்சாராம்.
(கள புடுங்க கூட லாயிக்கு இல்லங்கறது வேற விசயம்..)
எனக்கு புடிச்ச பேருதான், என் நண்பர்கள் கூப்பிடும்போது ரொம்ப பிடிக்கும்..
(பாதி பேரு, கலை அப்புடினா பொண்னுன்னு நனைச்சிக்கிறானுங்க!)
2.கடைசியாக அழுதது எப்பொழுது?
மே 22 2009 (மாவீரன்இல்லியே.. இனி என் மக்களுக்காக போராட என்று என்னியபொழுது)
3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
பின்ன? நா பல டைப்புல எழுதுவங்க.. ஸ்லேன்டிங், ரன்னிங், செப்பரேட்டட் /ன்னு எந்த எந்த ஆசிரியர்களுக்கு எப்டி புடிக்குதோ.. அப்டி! இந்த டக்கால்டி திறமையை(?) வச்சி பல பிகர்களை(?) திரும்பி பார்க்க வச்சிருக்கேன்! (நம்பவா போறீங்க..)
4).பிடித்த மதிய உணவு என்ன?
நான்-வெஜ் எல்லாமே பிடிக்கும் (மீன் தவிர). அதுவும் அம்மா செய்யுற வெரைட்டீஸ் இருக்கே...முனியான்டி விலாஸ் தோத்துது போங்க.. எரா,வாத்து,கொக்கு,முயல்,காடை,கவுதாரி, நொள்ளமடையான், இன்னும் சொன்னா கமென்ட்ஸ்ல ஏன் பாம்பு, தவளை எல்லாம் விட்டுடீங்கன்னு கேப்பீங்க.. சோ, ஸ்டாப்!
(சுருக்கமா சொன்னா சாப்பிடுற விஷயத்துல, என் பிரண்ட்ஸ என்ன கூப்புடுற பேரு : குறவன்)
5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
அதான் பாஸ் நம்ம ஸ்பேஷாலிட்டியே... அரை மணி நேரம் பேசுனா போதும், நம்ம நண்பர்தான் நீங்க! என்க்கு நட்பு வட்டாரம் ரொம்ம்ம்பபப பெருசு... ஆனா அதுல நன்மையும் இருக்கு தீமையும் இருக்கு.
6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
அருவி குளியல்: கடைசியா குற்றாலத்துல குளிச்சது... தலை மடங்கி உடம்புகுள்ள போற மாதிரி...
"கடல்தான் நம்ம பேவரேட்" கடலூர், தரங்கம்பாடி, வேளாங்கண்ணி- கடல்களை கேட்டா எங்க கதை சொல்லும்!
7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
அப்படி எதுவும் குறிப்பிட்டு சொல்ல முடியாது.. முதல் தடவபார்க்கும் போது, டிரஸ் சென்ஸ் & பேசுற விதம் இததான் கவனிக்கமுடியும்
8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
பிடிச்ச விஷயம்: என்ன பத்தி நானே எப்படி ? ஹி.. ஹி
பிடிக்காத விஷயம் : கோபம்! (மூன்று எழுத்து.. ஆனா அது பண்ற அழும்பு, ஆற்ற முடியாது)
9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
பிடிச்ச விஷயம்: எது சொன்னாலும் சரிங்க... செய்யறங்க..ன்னு சொல்லுற விதம் பிடிக்கும்!
பிடிக்காத விஷயம் : எது சொன்னாலும் சரிங்க..செய்யறங்க..ன்னு சொல்லிட்டு செய்யாம இருக்குறது!
(அடிக்கு பயந்து உண்மைய சொல்லா இருக்க முடியுமா?)10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?
அம்மாவும்.. நண்பர்களும்..11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?
கருப்பு நிற தேநீர் சட்டை(டீ ஷர்ட்), சாம்பல் நிற அரை குழாய் (ஷார்ட்ஸ்)
(ரொம்ம்மபப முக்கியம்.. அப்டின்னு நீங்க சொல்றது கேட்குது)
12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
வசப்பாட்டு தான்!
(நண்பன் சாப்பிட போலாமுன்னு கூப்பிட்டு அரைமணி நேரமாச்சி, அதுகா திட்டுவான் இப்டி?)
13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
கருப்புதான்..(என் ரூம் வாஷ் பேஸின் & குலோசெட் கூட கருப்புனா பாத்துகோங்க, நமக்கு எவ்ளோ புடிக்கும் அந்த கலர்ன்னு!)
14.பிடித்த மணம்?
தமிழ்மணம் அப்டின்னு சொல்லி உங்கள வெறுப்பேத்தாம...
மல்லிகைமணம்- ன்னு சொல்லி உங்க மணசுல இடம்பிடிக்கிறேன்!
15.நீங்க அழைக்கப் போகும் ஏன் உங்களுக்கு பிடித்த உள்ள. அவரை அழைக்கக் காரணம் என்ன ?
ஜாக்கி சேகர் : கடலூர்காரர்.. ஆல்இன்ஆல் அழகுராஜா! இரண்டு வருடமாக பதிவெழுதி பலரை (என்னையும் சேர்த்து) கொள்ளை அடித்தவர்... இன்னும் 3 பதிவுகள் எழுதினால் 200 பதிவுகளை தொடுபவர். அவருக்கு என் வாழ்த்துக்களும்... அழைப்பிதழும்!
அக்னிபார்வை :லவ்ஸ் கட்டி பதிவிடுபவர், வித்தியாசமான எழுத்துக்களால் வாசகர்களை தன் வசம் கட்டிவைத்துள்ளார் (அன்பாலதாங்க!). 100 பதிவுக்கு மேல் எழுதி 200 நோக்கி வெற்றி நடைபோடுறாரு, பறக்குறாரு, சீருறாரு..அவர நா இங்க மாட்டிவிடுறேன்.. சங்கிலி தொடராமுல்ல, எழுதலனா சாமிகுத்தம்!
இனியவன்: இளைமையான & நகைச்சுவையான எழுத்துக்கு சொந்தகாரர்... வந்த கொச்ச நாட்களிலேயே, பல பதிவர்களை திரும்பி பார்க்க வைத்தவர். அவருக்கு நம்ம வாழ்த்தும், அழைப்பும்!
(ஆங்கில மற்றும் வது விமர்சனத்தால் பின்னி பெடல் எடுத்து, நோன்டி நொங்கெடுப்பவர்.... அவருடைய எளிமையான எழுத்துக்களுக்கு நான் ரசிகன்! அப்படின்னு வண்ணத்துபூச்சியாரை கூப்பிடலாமுன்னு டைப் பன்னிட்டேன்.. அதுகுள்ள ஜெஸ்ட் மிஸ்சு! எம்மாம் பாஸ்டா இருக்காய்ங்க!)
16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?
பதிவுலக அருமை நண்பன் கிஷோரின் : வெளிநாட்டு மோகம் என்ற பதிவு. என் மனசுல இருந்தத அப்படியே எழுதி இருந்தான்!
(என்ன அப்டி பாக்குறீங்க? அந்த பதிவ நா எழுதி தரல அவனுக்கு..)
17. பிடித்த விளையாட்டு?
ஷட்டில்
சுக்ரீவனின் அண்ணன் பந்து, அதாங்க.. வாலிபால்!
ரம்யா.. சே, ரம்மின்னு டப் பன்னா அப்டி வருது!
(மவனே.. ஒழுங்கா பதில் சொல்டானு, நீங்க சொல்றது காதுல விழுது..)
18.கண்ணாடி அணிபவரா?
இல்லை!
(கண்ணாடி எதுக்குனா அணியனும்? தலை சீவுற அப்ப பார்த்தா மட்டும் போதாது?)
19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?
திரில்லர், உண்மை கதை, காமெடி
20.கடைசியாகப் பார்த்த படம்?
The Curious Case of Benjamin Button [2008]
21.பிடித்த பருவ காலம் எது?
ஐஸ் ஏஜ்! அப்டின்னு சொல்ல ஆசதான், ஆனா அப்ப நா பொறக்கலையே.. அதனால எந்த காலமாக இருந்தாலும் புடிக்கும், ராகுகாலத்தை தவிர!
22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்:
The Complete Idiots Guide to Tantric sex- அப்டின்னு சொன்னா புக்கு கேட்டு வருவீங்க என்பதால... Murphy's Laws 1000 - படிக்கிறேன்.
23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
அத எதுக்கு மாத்தனும்?
24.உங்களுக்கு பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
பிடித்த சப்தம் : அமைதியின் சத்தம்
பிடிக்காத சப்தம்: டி.வி. சத்தம் அதிகமானால்..
25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
வேற எங்க.. துபாய்தான்!
26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
இருக்குனு சொன்ன நம்பவா போறீங்க?
27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
என் அப்பாவின் இழப்பு!
28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
அப்படியே கோவிச்சிக்காம, மேல போயி 8வது கேள்விக்கு 2 வது பதில படிச்சுக்குங்க.. (படிக்கலனா.. டென்ஸ்சனாயிடுவேன், ஆமா!)
29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
வேளாங்கண்ணி.. தமிழ்நாட்டு கோவா! எத்தனை முறை போனாலும் எங்களுக்கு சலிக்கவே சலிக்காத ஊர்..பீச்சுல 2 மணி நேரம் உழுந்து பொறன்டுட்டு, கரையில உக்காந்து பீர் அடிச்சிகிட்டே, பிரஷா சூடா வருத்த எரா வை சாப்டா... யப்பா! எப்படா ஆகஸ்ட் மாசம் வருண்னு இருக்கு (அப்பதான் எனக்கு லீவு)
30.எப்படி இருக்கணும்னு ஆசை?
கர்ணன் போல : நாம செத்தாலும், நம்ம செஞ்சது வாழனும்!
31.கணவர்/மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம் ?
நெறைய இருக்குங்கண்ணா.. அப்புறமா நேருல சொல்றேன், சபையில சொல்ல முடியாது!
(இத படிச்சிபாத்துட்டு மன்டையில மொத்தறதுக்கா?)
32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?
கொடுங்கள்! பெறுங்கள்!!