Wednesday, January 6, 2010

ஏதோ நம்மளால முடிஞ்சது!!

2009, ஜனவரி 1 முதல் 7 வரை சாலைப் பாதுகாப்பு குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் முகமாக ஒவ்வொரு ஆண்டும் சாலை பாதுகாப்பு வார விழா தேசிய அளவில் ஜனவரி முதல் வாரத்தில் கடைப்பிடிக்கப்படுகிறது. தற்போது கடந்த ஆண்டுகளைப் போல மத்திய அரசு அறிவித்துள்ளபடி 20-வது சாலை பாதுகாப்பு வாரம் 2010 ஜனவரி 1 முதல் 7 வரை கடைப்பிடித்து வருகிறார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் தேசிய அளவில் சாலை விபத்துக்களில் ஏற்படும் உயிரிழப்பு சுமார் 1,20,000 பேருங்க. தமிழகத்தில் வாகனப் பெருக்கம் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 10 முதல் 11 சதவிகிதம் வரை அதிகரித்து வருகிறது. 01.11.2009 நிலவரப்படி தமிழகத்தில் 8,66,483 போக்குவரத்து வாகனங்களும் 98,99,761 போக்குவரத்து அல்லாத வாகனங்களும் ஆக மொத்தம் 1,07,66,244 வாகனங்கள் இயங்கி வருகின்றன. அபரிதமான வாகன பெருக்கத்தினாலும், சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு குறைவினாலும், சாலை விதிகளை முறையாக கடைப்பிடிக்காததாலும் 2009 ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் திங்கள் சாலை விபத்துக்களில் 10,958 உயிர்களை தமிழகம் இழந்துள்ளது. (ஸ்ப்பா.. நன்றி விசயகாந்த்!)

சாலைப் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நிர்வாகம் என்பது காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகளின் பொறுப்பு மட்டுமல்ல, இதற்கு சாலைகளை பயன்படுத்தும் சம்பந்தப்பட்ட அனைவரும் பங்களிப்பு செய்ய வேண்டும் என்று தன்னார்வ தமிழன் ஆதவன் அவர்கள் கேட்டுகொண்டதுக்கினங்க.. ஏதோ நம்மாளால முடிஞ்ச சில பாதுக்காப்பு விளம்பரங்களும்.. கடைசியா ஒரு ஐந்து பேருக்கு ஆப்பும்..

Safety5.jpg picture by rkarasans

Safety6.jpg picture by rkarasans


safety1.jpg picture by rkarasans

safety2.jpg picture by rkarasans

safety4.jpg picture by rkarasans
safety7.jpg picture by rkarasans

safety8.jpg picture by rkarasans

சாலைப் பாதுகாப்புத் தெடர்பான இடுகைகளை எழுத கீழ்வரும் நண்பர்களை (இனிமே நண்பர்களா இருப்பாங்க????) அழைக்கிறேன்.

தன்மான தமிழன் விகொ..

தான தலைவன் ஹாலிவுட் பாலா...

வீர தமிழச்சி சுசி...

அஞ்சா நெஞ்சன் நாஞ்சில் பிரதாப்..

நாட்டுக்கொரு நல்லவன் செந்தில்வேலன்...

(நீங்களும் ஒரு 5 பேரை கூப்பிட்டு உங்க பழிய தீர்த்துக்குங்க!!)

விஸ்கி: நான் எந்த விருதிற்காவும், எந்த திரட்டியிலும், எந்த பிரிவுலும், எந்த சுற்றிலும் கலந்து கொள்ளவில்லை. ஆகவே நண்பர்களே.. எனக்கு ஓட்டு எப்படி போடுவது? என்று சிந்திப்பதை விட்டுவிட்டு நாலு பேருக்கு நல்லது செய்யுங்க! நீங்களும் நல்லா இருங்க!!

69 comments:

Subankan said...

//நாலு பேருக்கு நல்லது செய்யுங்க! நீங்களும் நல்லா இருங்க!//

நல்ல பதிவு தல!, வாழ்த்துகள்!!

விக்னேஷ்வரி said...

நல்ல பதிவுங்க. விஜயகாந்த் மேட்டரும் கலெக்ட் பண்ணியிருக்கீங்க. :)

நாகா said...

குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால்... கலக்கல்!

கண்ணா.. said...

கந்தசாமி...கந்தசாமி...கருத்து கந்தசாமி

கண்ணா.. said...

ஊர் உலகம் பயன் பெற பல நல்ல கருத்துகளை தொகுத்து வழங்கியதால் நீ இன்றிலிருந்து “கருத்து கந்தசாமி” என வரலாற்றில் பொறிக்க படுகிறாய்

☀நான் ஆதவன்☀ said...

//விஸ்கி: நான் எந்த விருதிற்காவும், எந்த திரட்டியிலும், எந்த பிரிவுலும், எந்த சுற்றிலும் கலந்து கொள்ளவில்லை. ஆகவே நண்பர்களே.. எனக்கு ஓட்டு எப்படி போடுவது? என்று சிந்திப்பதை விட்டுவிட்டு நாலு பேருக்கு நல்லது செய்யுங்க! நீங்களும் நல்லா இருங்க!! //

பார்றா???? சீரியஸ் பதிவுலேயும் காமெடி செய்யிறாரு :))

☀நான் ஆதவன்☀ said...

//கண்ணா.. said...

கந்தசாமி...கந்தசாமி...கருத்து கந்தசாமி/

ரிப்பீட்டு

சிநேகிதன் அக்பர் said...

நல்ல பகிர்வு.

துபாய்ல இருந்துகிட்டு நாட்டை பற்றி கவலைப்படுறீங்க பாருங்க உங்க நேர்மை, பாசம் எல்லாம் பிடிச்சிருக்கு

கண்ணா.. said...

//அக்பர் said...
நல்ல பகிர்வு.

துபாய்ல இருந்துகிட்டு நாட்டை பற்றி கவலைப்படுறீங்க பாருங்க உங்க நேர்மை, பாசம் எல்லாம் பிடிச்சிருக்கு//

அய்யய்ய...

அக்பர் அண்ணே...இந்த நாதாரிக்கு அதெல்லாம் ஒண்ணும் தெரியாது. ஏதோ நேத்து அடிச்ச மப்பு தெளியாம.. மெயில்ல வந்ததை எடுத்து போட்டுட்டான்...மனனிச்சு விட்டுருங்க....

geethappriyan said...

சிரிப்போ சிரிப்பு
மீண்டும் மீண்டும் சிரிப்பு
வாக்குகள் சேர்த்துவிட்டேண்டாப்பா.
==========
நிம்மதியா தூங்கு

geethappriyan said...

கருத்து கந்தைசாமி
இது தான் சரி

geethappriyan said...

பார்றா???? சீரியஸ் பதிவுலேயும் காமெடி செய்யிறாரு :))//
கோழி குருடாயிருந்தாலும் கொழம்பு
ருசியாக்கீதுப்பா

Prathap Kumar S. said...

//கந்தசாமி...கந்தசாமி...கருத்து கந்தசாமி//

கண்ணாபின்னா தாறமாறா ரிப்பிட்ட்டே.... ஆனா கருத்து எல்லாம் நல்லாவேகீது...

ஏன்தல வம்புல மாட்டிவுடுறீக? தெளிய வச்சு தெளிய வச்சு அடிக்கிறாய்ஙகளே???

வே கணணா இருவே... எஸ்ஸாயிட்டேன்னு மாத்ரம் நெனக்காதியும்... அடுத்த ஆப்பு உமக்குத்தான்...

Jazeela said...

நாலு பேருக்கு நல்லது செய்யணும்னா எதுவுமே தப்பில்ல அதனால உங்க பதிவை தாங்கிக்கிறோம். :-). நிஜமாவே நல்லாயிருக்கு.

geethappriyan said...

ஊர் உலகம் பயன் பெற பல நல்ல கருத்துகளை தொகுத்து வழங்கியதால் நீ இன்றிலிருந்து “கருத்து கந்தசாமி” என வரலாற்றில் பொறிக்க படுகிறாய்//

ஊர் உலகம் பயன் பெற பல நல்ல கருத்துகளை தொகுத்து வழங்கியதால் நீ இன்றிலிருந்து “கருத்து கந்தைசாமி” என ப்திவுலக வரலாற்றில் வறுக்கப் படுகிறாய்

பின்னோக்கி said...

நிறைய ***நல்ல**** விஷயம் எழுதியிருக்கீங்க. 10,000 பேர் இறந்திருக்கலாம். ஆனால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.

கண்ணா.. said...

கருத்து கந்தசாமியின் தத்துவம் நம்பர் ஒண்ணு

If U Win U Need not Explain.. But if U Lose.. U should not be there to Explain!

சங்கமித்திரன் said...

இது மெயில்ல வந்த
காமெடிபீசாப்பா,நீ என்ன ஒரு லூசாப்பா. கெக்கேகெகெகெபிக்கே ன்னு இருக்கே.முஷ்கில் நஹின் ஹே

Ashok D said...

தன்மானச்சிங்கம் கலையரசன் பட்டம் கொடுத்து நான் விருது வழங்குகிறேன். போட்டோயெல்லாம் நல்லா வந்திருக்கு.. குசும்பன்தானே எடிட்டிட் பண்ணார்?("ஏதோ நம்மளால முடிஞ்சது!!":))

Paleo God said...

விஸ்கி: நான் எந்த விருதிற்காவும், எந்த திரட்டியிலும், எந்த பிரிவுலும், எந்த சுற்றிலும் கலந்து கொள்ளவில்லை. ஆகவே நண்பர்களே.. எனக்கு ஓட்டு எப்படி போடுவது? என்று சிந்திப்பதை விட்டுவிட்டு நாலு பேருக்கு நல்லது செய்யுங்க! நீங்களும் நல்லா இருங்க!//

இருந்தாலும் உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு ::)

பித்தன் said...

நல்ல கருத்து

Prabhu said...

பாலாவா... ஹி.. ஹி... அய்யோ.. அய்யோ.. அண்ணே, தொடர் பதிவாம். வந்து வாங்கிக்கோங்க!

பாலா said...

இவருக்கு.. 150+ பதிவையும்.. நானே படிச்சிக் காட்டப் போறேன்.

எச்சரிக்கையையும் மீறி... நம்மளை கூப்பிடுறாரே..!! கலையரசனா... இல்ல தில்லரசனா???

உட்ரா.. ஃப்ளைட்டை... சவுதிக்கு.

--

கலை..! ஊருக்கு வந்தே.. 6 வருசம் ஆச்சுங்க. அங்க ரோடு இருக்கா.. இல்லையான்னு கூடத் தெரியாது. நானுமா இதுல?

உங்களுக்காக.. ஒரு பத்து 18+ எழுதினா.. இதிலிருந்து வரிவிலக்கு கிடைக்குமா???

kishore said...

நல்லது சந்தோசம் மகிழ்ச்சி..

வினோத் கெளதம் said...

;)

வினோத் கெளதம் said...

Enna koopitathu oru vidathil dookamaa irunthalum koodavey enga "holly" baaly, "nakkal" nanjil..ivanagalai elloroyum koopitathil magilchi.

கிரி said...

அந்த சைக்கிள் கலைஞர் Brand ஆ ;-)

Thenammai Lakshmanan said...

கலையரசன் உங்களுக்கு ஒரு சின்னப் பசங்க இடுகை போட்டு இருக்கேன்

வந்து பார்த்து உங்க பொன்னான கமெண்ட்ஸ்மற்றும் ஓட்டுப் போடவும்

ஹாஹாஹா

ஏன் எங்களுக்கு சாலைப் பாது காப்புப் பற்றி எழுதத் தெரியாதாக்கும்..

இத்தனைக்கும் அகனாழிகையை வைத்தே மூன்று கட்டுரை எழுதி இருக்கேன்

நர.. நர ..நர..

இப்படி வேற்றுமை பாராட்டும் கலை நீண்ட காலம் வலை சேவை செய்யக் கடவதாக ..

வினோத் கெளதம் said...

//தனமான தமிழன் விகொ//

சாமி அது விகொ இல்லை விகௌ..

jothi said...

பாதுகாப்பதை பாதுகாப்பதே பாதுகாப்பு

இராகவன் நைஜிரியா said...

எனக்கு கேமிரா வாங்கிக் கொடுத்த அன்புத் தம்பியே...

குழப்பாம சொல்லு... ஒட்டு போடணுமா.. வேண்டாமா...

Chitra said...

விழிப்புணர்வு வாரம்........ குட் ஸ்டார்ட்!
ஏதோ நம்மால முடிஞ்சது ஓட்டு போட்டுட்டேன். நிறைய பேர் வாசித்து பயன் பெறட்டும்.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

கருத்துக் கந்தசாமி கலை,

( க க க போ )..

நல்ல பதிவு. படங்களில் உங்கள் உழைப்பு தெரிகிறது. என்னை அழைத்தமைக்கு நன்றி.

Anonymous said...

எலே நீ சொல்லுற தலைகவசம் பட்டினத்துகார பயப்புளைகளுக்கு வேணா சரியா இருக்கும் கிராமத்தான் என்ன பண்ணுவன்லே..

ப்ரியமுடன் வசந்த் said...

நல்ல கிரியேசன்ஸ் கலையரசன்...!

ப்ரியமுடன் வசந்த் said...

விகொ//

வினோத் டர்ர்ர்ர்ர்ர்ர்ர்........

வீரதமிழச்சி//

ரியல்

கோபிநாத் said...

கலக்கல் டா மச்சி ;))

Unknown said...

படமும், கருத்தும் மிகவும் அருமையாக இருக்கு

ஹேமா said...

ரசிக்கக்கூடிய விதத்தில் நல்ல கருத்துக்கள்.செவி சாய்த்தால் நல்லதே !

சுசி said...

ரொம்ப நன்றி கலை.

பாலைவனத்துல வண்டி ஓட்டியே ஒருத்தர் ஒரு அப்பாவி காலை உடைச்சு வச்சுட்டார்.

அவருக்கு முதல்ல இத படிக்க சொல்லி அனுப்பி வைக்கிறேன்.

அப்பவாவது கழுகுப் பார்வைய விட்டுட்டு விழிப்புணர்வு வருதான்னு பார்ப்போம்.

சுசி said...

//ஏதோ நம்மாளால முடிஞ்ச சில பாதுக்காப்பு விளம்பரங்களும்..//
சமத்து..

//கடைசியா ஒரு ஐந்து பேருக்கு ஆப்பும்..//
மொத்து..

சுசி said...

வளைவில் முந்தாதீர்னு போட்டிருக்கீங்க. ரோடு நே....ரா போது???

//இனிமே நண்பர்களா இருப்பாங்க????//
கண்டிப்பா கலை. மத்தவங்கள பத்தி தெரியல.. நான் இருந்தே ஆகணும். பதில் சூனியம் வைக்கணும்ல :)))

//வீர தமிழச்சி சுசி..//
இன்னைக்கு கொஞ்சம் சீரியஸ் பதிவா இருக்கேன்னு படிச்சிட்டே வந்தா..
இத படிச்சதும் சிரிப்பா சிரிச்சிட்டேன் கலை. வாலால அடிப்பேன்னத்துக்கே இந்த பட்டம்னா.. ரொம்ப நன்றிப்பா.

சுசி said...

வேற ஒண்ணுமில்ல கலை.. நம்ம சின்ன அம்மிணி என்னைய இதே பதிவ தொடர கூப்டுருந்தாங்களா.. நீங்க வேற சூப்பரா அடுத்தவங்க கால் மேலே வண்டி ஓட்டி இருந்தீங்களா.. உங்கள நான் மாட்டி விடலாம்னு இருந்தேனா.. இப்போ எனக்கே ஆப்பு வச்சிட்டீங்களா..

//"ஏதோ நம்மளால முடிஞ்சது!"//

சுசி said...

// //வீரதமிழச்சி//

ரியல்//

அப்டீங்களா உ.பி???

இனிமே ஒன்லி ஆக்..ஷன் தான்.

goma said...

வாகனம் ஓட்டும் பொழுது
தவிர்க்க வேண்டியவை

சூடான விவாதம்

மனக்குழப்பம்[எண்ணச் சிதறல்]

புலவன் புலிகேசி said...

சூப்பருங்க..

ரவி said...

very nice

calmmen said...

என்னை தலைவன்னு சொல்லி பெரிய ஆள் ஆக்காதீங்க சார்
உங்களுடைய ப்ளாக் அருமை

karurkirukkan.blogspot.com

Anonymous said...

அவசியமான பதிவு கலையரசன் எளிமையா சொல்லியிருக்கீங்க...அனைவரும் பின்பற்றினால் நலமே....

கலையரசன் said...

Subankan -க்கு
நன்றி தல!, மகிழ்ச்சி!!

விக்னேஷ்வரி -க்கு
நன்றிங்க விக்கி! விஜயகாந்த் பேரு சும்மா ஒரு டெரருக்கு..

நாகா -க்கு
வாய்யா... எங்கைய்யா போன இம்புட்டு நாளா??? சனிகிழமை போன் பண்றேன்!

கண்ணா.. -க்கு
லேபிளை படிடா... குருட்டு 'கண்'ணா!!

கலையரசன் said...

கண்ணா.. -க்கு
அவிஞ்ச கண்ணை வச்சிகிட்டு, போற போக்குல லேபிளை படிக்காமல், கருத்தை பெரிய பரப்பு மாதிரி வழங்கியதால் நீ இன்றிலிருந்து “குருட்டு குப்புசாமி” என அறிவியலில் அறியப்படுவாய்!!

☀நான் ஆதவன்☀ -க்கு
நன்றி பாஸ்... நல்லவேளை சிரிப்புன்னு ஒத்துகிட்டிங்களே பாஸ்...
(ரிப்பீட் வேகமா வருது...???)

அக்பர் -க்கு
நன்றி தலைவா.. எங்க இருந்தா என்ன தலைவா? கடமையை செய்யனும் இல்ல??

கண்ணா.. -க்கு
டேய் ஸ்கொயர் கட் மண்டையா!! ஒக்காந்து 4 மணி நேரமா விளம்பரங்களை மண்டை காய ரெடி பண்ணா.. நீ என்னடான்னா, மெயில் வந்துதுந்து.. ஆயா வாயில வந்துதுன்னு.. போற போக்குல அள்ளிபோட்டுட்டு போற???

கலையரசன் said...

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் -க்கு
//சிரிப்போ சிரிப்பு// - ஏலே டொக்கு கண்ணா.. இதுல எந்த இடத்துல உனக்கு சிரிப்பு வந்தது??

//மீண்டும் மீண்டும் சிரிப்பு// - இது என்ன மிராண்டாவின் மீண்டும் மீண்டும் சிரிப்பா? படிச்சி பாத்துட்டு கமெண்டை போடுடா பிக்காலி பயபுள்ளையே!!

//வாக்குகள் சேர்த்துவிட்டேண்டாப்பா// - ம்கும்.. இதுக்கு மட்டும்தான் நீ லாயக்கு!!

//நிம்மதியா தூங்கு// - இது என்ன உங்க ஆப்பீஸா? பதிவு போடுறத்துக்கும், தூங்குறத்துக்கும்!!

//கோழி குருடாயிருந்தாலும் கொழம்பு ருசியாக்கீதுப்பா// - இது என்ன சம்பந்தம் இல்லாம?? லன்ச் டைம்ல துன்னுகிட்டு இருக்கியா??

நாஞ்சில் பிரதாப் -க்கு
வாங்க எக்ஸ்பிரஸ்.. ஏதோ நம்மளால முடிஞ்சது! அந்த கண்ணாவை கூப்பிட்டு தொலைய்யா... அவனை கூப்பிடலைன்னு என்னா தான்டவம்???

ஜெஸிலா -க்கு
உண்மையாவா?? நன்றி டீச்சர்!

கலையரசன் said...

பின்னோக்கி -க்கு
கண்டிப்பாக உண்மை தலைவா! நன்றி உங்கள் வருகைக்கு..

கண்ணா.. -க்கு
டேய்.. நீ இன்னம் போகலையா?? சுடுத்தண்ணி புடுச்சு மூஞ்சில ஊத்துனாதான் போவ போல..?

ரோகவன் எத்தியோபியா -க்கு
ஹிந்தியெல்லாம் பேசுது??? போயிட்டு அப்புறமா வா.. சில்லரை இல்ல..

D.R.Ashok -க்கு
நன்றி தலைவா.. தன்மானச்சிங்கம் பட்டம் கொடுத்துட்டு.. கூடவே குசும்பு??

கலையரசன் said...

பலா பட்டறை -க்கு
நன்றி தலைவா.. நேர்மை ரொம்ப பிடிக்கும் போல??

பித்தன் -க்கு
நன்றி நியாஸ்.. நல்ல கமெண்ட்டு!

pappu -க்கு
வந்ததுக்கு எதுனா சொல்லிட்டு போப்பா.. பாலாவை நான் கூப்டுகுறேன்!!

ஹாலிவுட் பாலா -க்கு
வாங்க பாலு! உட்ரா ஃப்ளைட்டை சவுதிக்குன்னு சொல்றீங்களே??
அங்க யாரு இருக்கா... உங்க சகலையா? யோவ்..
நாங்க இருக்குறது அமீரகம்யா (யூ.ஏ.இ) :-)

அப்புறம் பாஸூ.. நீங்க ஊருக்கு வந்து 19 வருஷம் ஆவுறத்துக்கும், நான் ரோடு சேப்டி பத்தி எழுத சொன்னத்துக்கும் என்னைய்யா சம்பந்தம்? பாதுகாப்பு எல்லா இடத்துலேயும் ஒன்னுதான்!! (பதிவை படிக்கலையோ??)

//ஒரு பத்து 18+ எழுதினா.. //
நா என்ன கிஷோரா??? செல்லாது! செல்லாது!!
ஹி.. ஹி.. இருபதுன்னா ஓ.கே!!

கலையரசன் said...

KISHORE -க்கு
நன்றி.. வந்தனம்.. மீண்டும் வருக..

வினோத்கெளதம் -க்கு
உனக்கா?? துக்கமா?? தூக்கமா இருக்கும்...
அம்மாம் ரனகளத்துலையும்.. உனக்கு கிளுகிளுப்பு..ம்?

கிரி -க்கு
ஆகா! எப்புடி போனாலும் அணை கட்டுறானுங்ளே...

thenammailakshmanan -க்கு
நன்றி மேடம்! ஆகா.. இதுதெரிஞ்சிருந்தா உங்களையும் கூப்பிட்டு இருப்பேனே!! அடுத்த தடவை நீ்ங்க என் லிஸ்ட்டுல கண்டிப்பா உண்டு!! கண்டிப்பா வந்து கள்ள ஓட்டும்.. செல்லாத கமெண்டும் போடுறேன்!!

கலையரசன் said...

வினோத்கெளதம் -க்கு
//சாமி அது விகொ இல்லை விகௌ..//

சரிய்யா வாத்தி... அந்த குச்ச தூக்கி உள்ள வை..

jothi -க்கு
வாங்க ஜோதி.. நீங்க எந்த பாதுகாப்பை சொல்றீங்க??

இராகவன் நைஜிரியா -க்கு
வாங்கண்ணே... ஓட்டு போடுங்க.. ஆனா,
அதுக்கு போடாதீங்க!! எப்பூடி.. இன்னம் நல்லா கொழப்புனனா??

Chitra -க்கு
நன்றி மேடம்! குட் ஊக்கம்...

கலையரசன் said...

ச.செந்தில்வேலன் -க்கு
செந்திலு.. நீயுமா??? நீயுமா??? நீயுமா???
கண்டிப்பா எழுங்க.. எங்கயோ போயிடுவீங்க!!

'மாயி' சரத்குமார் -க்கு
வாங்க மாவு சரத்.. சாரி.. மாயி சரத்!
கிராமத்தானை அலுமுனிய அண்டாவை, கண்ணுக்கு நேரா இரண்டு ஓட்டை போட்டு, தலையில கவுத்துக்க செல்லுங்க சரத்து...

பிரியமுடன்...வசந்த் -க்கு
வாங்க மாப்புள..
நல்ல கிரியேசன்ஸ்ன்னு நீயாவது சொன்னியே...

கோபிநாத் -க்கு
ஊருலேருந்து வந்த சரி... எங்க ஒளிஞ்சிகிட்டு இருக்க?? போன் பண்ணுடா மூதேவி!!

கலையரசன் said...

Mrs.Faizakader -க்கு
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி காதர்..

சங்கமித்திரன் -க்கு
தப்பு.. நான் நாயக்கன் இல்ல.. வேற! கண்டுபுடி பாக்கலாம்.. அப்பதான் காசு!!

ஹேமா -க்கு
நன்றி மேடம்.. ஒவ்வொருத்தரும் கடைபிடித்தால் நல்லதுதான்!!

சுசி -க்கு
வாங்க மருத்துவ மங்காத்தா.. நல்லா அடிங்க வேப்பிலைய!! வேற யாருக்கு?? எனக்குதான்.. வலிக்கலையே! வலிக்கலையே!!

கலையரசன் said...

சுசி -க்கு
//இனிமே ஒன்லி ஆக்..ஷன் தான்//
யம்மா.. சாமி.. ஏற்கனவே உடம்பு ரனகளமா இருக்கு!
மறுபடியுமமமமமமா??

goma -க்கு
கரைக்டா சொன்னீங்க கோமா..
எற்றுகொள்ளபட வேண்டிய கருத்துக்கள்..
நன்றி வருகைக்கு..

புலவன் புலிகேசி -க்கு
நன்றிங்க டைகர்..

கலையரசன் said...

செந்தழல் ரவி -க்கு
நன்றி தலைவா! எங்க ஆளையே கானும்.. கொஞ்ச நாளா??
பதுங்கறது.. பாயறதுக்கா??

BOSS -க்கு
என்ன தலைவா இப்படி சொல்லிட்டீங்க???
நன்றி உங்க வாழ்த்துக்கும், வருகைக்கும்!!

தமிழரசி -க்கு
வருகைக்கு நன்றி மேடம்!
எல்லாரும் பின்பற்றினால் நலமே...

அனுபவம் said...

ரொம்ப அசத்துறீங்க!
அன்புடன்
தணிகாஷ்

ARV Loshan said...

ஆகாக நல்லவரே வாழ்க.. அந்தக் குழந்தை அழும் படம் அருமை..நெஞ்சைத் தொட்டது.

அது சரி இதென்ன வேடிக்கை?
//விஸ்கி: நான் எந்த விருதிற்காவும், எந்த திரட்டியிலும், எந்த பிரிவுலும், எந்த சுற்றிலும் கலந்து கொள்ளவில்லை. ஆகவே நண்பர்களே.. எனக்கு ஓட்டு எப்படி போடுவது? என்று சிந்திப்பதை விட்டுவிட்டு நாலு பேருக்கு நல்லது செய்யுங்க! நீங்களும் நல்லா இருங்க!//

இப்பிடி சொல்லி சொல்லியே வாக்குகளைக் குவிக்கறீங்க.. அனுதாபம்? ;)

சினிமா புலவன் said...

தேவையான பதிவு

பாலா said...

/////வாங்க பாலு! உட்ரா ஃப்ளைட்டை சவுதிக்குன்னு சொல்றீங்களே??
அங்க யாரு இருக்கா... உங்க சகலையா? யோவ்..
நாங்க இருக்குறது அமீரகம்யா (யூ.ஏ.இ) :-)////

அங்க இருந்து... பஸ் புடிச்சி வர முடியாதுங்களா?

இந்த கன்பீஜிக்குத்தான்.... மிடில் ஈஸ்ட்ட்னு சொல்லிட்டு போறது.

உட்ரா.. ஃப்ளைட்டை மிடில் ஈஸ்ட்டுக்கு.

RADAAN said...

பிளாக் எழுதுபவர்களுக்கு ரடான் மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்தின் பல்வேறு வாய்ப்புக்கள்...
எங்கள் வலைத்தளத்தில் உங்கள் பதிவுகளை பகிர்ந்து கொள்ளுங்கள்...
www.radaan.tv

http://radaan.tv/Creative/DisplayCreativeCorner.aspx

Joe said...

பயனுள்ள இடுகை, கலை.

பேசி ரொம்ப நாளாச்சு.

burkkevin said...

Incredible blog here! It's mind boggling posting with the checked and genuinely accommodating data. Fullmetal Alchemist Jacket

winprofx.com said...

Free Funded Forex Account is your gateway to risk-free trading, allowing traders to access substantial trading capital without investing their own money. By proving your skills through evaluation programs, you can earn a funded account and trade the global forex market with confidence. This opportunity helps reduce personal financial risk while giving you access to professional trading conditions, larger position sizes, and attractive profit-sharing models. Whether you are a beginner looking to gain experience or an experienced trader aiming to scale your performance, a free funded forex account can help you achieve your trading goals and unlock greater earning potential.

winprofx.com said...

A Forex Trading Platform is a powerful gateway to the global currency markets, enabling traders to buy and sell currency pairs with speed, precision, and confidence. Equipped with advanced charting tools, real-time market data, technical indicators, and seamless trade execution, a reliable forex platform helps traders analyze market trends and make informed decisions. Whether you are a beginner learning the basics or a seasoned trader implementing complex strategies, the right trading platform provides the flexibility, security, and performance needed to succeed in today's fast-moving financial markets. Trade smarter, monitor opportunities in real time, and take control of your trading journey with a professional forex trading platform.
Contact us Address — 1st Floor, The Sotheby Building, Rodney Bay, Gros-Islet, SAINT Lucia P.O Box 838, Castries, Saint Lucia Phone no — +97144471894 Website — https://winprofx.com/

Blog Widget by LinkWithin