வணக்கம் நண்பர்களே... நலமா?
என்னடா.. 1வருஷமா இவன் பதிவு ஒண்ணையும் காணோம்னு ஆளாளுக்கு, இவன் செத்துத்தான்னு நிம்மதியா இருந்தீங்களா? காலாட்டிக்கிட்டே தூங்கலைன்னா மனுசன் செத்துட்டதா நெனச்சி புதைச்சிருவாங்களாம்.. அதான் அப்படி ஏதாவது நினைச்சு கருமாதி பண்ணிடாதீங்கனு சொல்லிட்டு போலாம்னு வந்தேன் :)

நிற்க.
கொஞ்ச நாளா பதிவுலகம் பக்கமே வர முடியல.. (டபுள் மீனிங்?) வேலை தேடுதல், கல்யாணம், கருமாதின்னு பல நவீன பிரச்சனைகள். இப்போ எல்லாம் ஓரளவுக்கு சிமெண்ட் போட்டு செட் ஆக்கியாச்சு! சரி.. எல்லாம் முடிச்சு வேலை வெட்டி இல்லாதவன் என்ன செய்வான்? கரெக்ட்... அதேதான்... ஆரம்பிச்சிட்டேன். (எவன்டா அவன்? அதுகுள்ள மவுஸை, க்லோஸ் பட்டன் கிட்ட கொண்டுபோறது?)
ஏறத்தாழ இரண்டாண்டுகளாக வலையில் எழுதினாலும், நா சொல்லிக் கொள்ளும்படியா ஒன்னும் எழுதி கிழிக்கலை இதுவரைக்கும். சில சமயங்கள்ல ஆணி அடிப்பது அதிகமானாலோ, மன/பணகஷ்டம் அதிகமானாலோ, கண்டிப்பா பதிவுலகத்துல எழுதவோ படிக்கவோ மனசு வரலைங்க. (அப்டி எழுத, படிக்கலன்னா செத்தா போயிடுவ? # உங்க மனசாட்சி) அஃப்கோர்ஸ், இந்த மாதிரி வழக்கமான விதிகள் மான்புமிகு பதிவுலக பரதேசிகளுக்கு பொருந்தாது! அது யாரு யாருன்னு சொல்லி தெரிய வேண்டியது இல்லை.
உட்காறு.
அப்படி என்ன முக்கியம் இது? பதிவு எழுதி, கமெண்ட் போடுறதுன்னு சில பேர் கேட்பீ்ங்க. சரிதான்! அதை செய்ததால் எனக்கு இந்த பதிவுலகம் சில முக்கியமான நண்பர்களை கொடுத்திருக்கு! சில சிக்கலான சூழ்நிலையில் இருந்த போது பண உதவியும், மனஉறுதியும் அளித்த நண்பர்கள் வினோத், சென்ஷி, அறிவுதேடல் கார்த்திகேயன், ஆதவன், அகமத் சுபைர், குசும்பன் மற்றும் பல நண்பர்கள் எந்த ஒரு பலனையும் எதிர்பாராது செய்த அந்த உதவியை நினைத்துப்பார்க்கிறேன். நன்றி சொல்லி அவர்களை அன்னியப்படுத்த விரும்பவில்லை!
படுத்துக்கோ.
என்னய்யா... நா சரியாதானே பேசறேன்? இது வரைக்கும் சைலண்ட் மோடில் இருந்த என் பதிவு, இனி ஸ்டார்ட் மியூஜிக் மோடில் மாறுகிறது. இனி பொழுதுபோகாத வேளையில்.. பல மொக்கைகளோடு வந்து...
என்னய்யா... நா சரியாதானே பேசறேன்? இது வரைக்கும் சைலண்ட் மோடில் இருந்த என் பதிவு, இனி ஸ்டார்ட் மியூஜிக் மோடில் மாறுகிறது. இனி பொழுதுபோகாத வேளையில்.. பல மொக்கைகளோடு வந்து...
டன் டன் டன் டன் டன்ன்ன்...
யேய் டன்டனக்கா.. டனக்குனக்கா...
ஜிந்தாக்தா.. ஜிந்தா ஜிந்தா.. ஜிந்தாக்தா.. தா..
(உங்களுக்கு எந்த மெட்டு புடிக்குதோ அதை போட்டுக்குங்க)
